நாட்டை உலுக்கிய சம்பவம்! உபி ஆன்மீக நிகழ்ச்சியை நடத்திய சாமியார் யார்? வெளியான பரபர தகவல்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சாமியார் போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150 பேருக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்த தேசத்தையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கான காரணமான ஆன்மிக நிகழ்ச்சியை நடத்திய சாமியார் போலே பாபா யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே உள்ள முகல்கர்ஹி கிராமத்தில் சாமியார் போலே பாபாவின் (Bhole Baba) ஆன்மீக நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுகணக்கானோர் பங்கேற்று இருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றுள்ளனர்.

122 பேர் உயிரிழப்பு: இதனால் அங்கு கடுமையான நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் நகரவே முடியாத அளவுக்கு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அதேபோல ஒரே ஒரு கேட் மட்டுமே இருந்து இருக்கிறது. மக்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு வெளியேற முயற்சித்ததால், நெரிசலில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்: மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த சாமியார்?: மேலும் உயிரிழ்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணத்தையும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஒட்டு மொத்த தேசத்தையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கான காரணமாக நிகழ்ச்சியை நடத்திய சாமியார் நராயண சாகர் ஹரி யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. போலோ பாபா என்று அழைக்கப்படும் இவர் உத்த பிரதேச மாநிலத்தில் உள்ள எடா மாவட்டத்தின் படியாலி தாலுகாவில் உள்ள பஹதூர் கிராமத்தை சேர்நதவர்.
உபி ஹத்ராஸில் மருத்துவமனை முழுவதும் நிரம்பி வழியும் உடல்கள்.. ஒரே ஒரு மருத்துவர் இருந்ததாக புகார்
வட மாநிலங்களில் தெரியாதவர்களே இல்லை: உளவுத்துறையில் பணியாற்றியதாக கூறும் இவர் தனது 26 வயதில் வேலையை உதறி தள்ளிவிட்டு ஆன்மிக சொற்பொழிவுகளை வழங்க தொடங்கியுள்ளர். நாடு முழுவதும் இவருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்களாம். குறிப்பாக வடக்கு உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டர்கள் என்கிறார்கள்.
சமூக வலைத்தள கணக்கு கிடையாது: தற்போதைய காலகட்டத்தில் பல சாமியார்களும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்கள். ஆனால், இவர் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் எதையுமே வைத்து இருக்கவில்லை. இதனால், வட இந்தியா அளவுக்கு நாட்டின் பிற பகுதிகளில் போலோ பாபா அவ்வளவு பரிட்சயமாக இல்லையாம். போலோ பாபாவின் நிகழ்ச்சி உத்தர பிரதேசத்தின் அலிகாரில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது.
உ.பி ஹத்ராஸில் சாமியார் பிரசங்க நிகழ்ச்சியில் பயங்கர கூட்ட நெரிசல்.. பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு!
கொரோனா காலத்தில் கூட: இதில் நூற்றுக்கானவர்கள் கலந்து கொள்வது வாடிக்கையாக உள்ளதாம். நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்த ஆன்மீக நிகழ்ச்சியில் தன்னார்வர்களே உனவு, குடிநீர் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். கொரோனா பெருந்தொற்று கால கட்டத்தில் கட்டுப்பாடுகள் இருந்த சமயத்திலும் இவர் நிகழ்ச்சிகளை நடத்தி வந்து இருக்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications