வேறு ஆணுடன் வாட்ஸ் அப்பில் அப்படி ஒரு சாட்டிங்.. கொசுமருந்தை வாயில் ஊற்றி அஞ்சலியை கொன்ற கணவன்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: வேறு ஒரு ஆணுடன் வாட்ஸ் ஆப்பில் பேசியதாக மனைவியின் வாயில் கொசு மருந்தை ஊற்றிவிட்டு கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவின் சுதாமபுரி பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் கடந்த 30-ம் தேதி 25 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து பிணமாக கிடந்தார்.

Woman killed by husband after forced to drink mosquito repellent

இது குறித்து தகவல் அறிந்து வந்து உடலை கைப்பற்றிய போலீசார் அந்த பெண் யார் என்பதை கண்டுபிடித்தனர். அவர் ஆக்ராவைச் சேர்ந்த சோனு என்பவரின் மனைவி அஞ்சலி என்பது தெரியவந்தது. இந்த தம்பதிக்கு 6 வயதில் மற்றும 4 வயதில் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அஞ்சலியின் தந்தை கிரிராஜ் அளித்த புகாரை ஏற்று அவரின் கணவர் சோனுவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக இதாம் உத் தவ்லா காவல்நிலைய இன்ஸ்பெக்டர் உதய்வீர் சிங், சோனு அளித்த வாக்குமூலம் குறித்து கூறுகையில், சோனு அந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவரது மனைவி அஞ்சலி சம்பவ தினத்தன்று வேறு ஒரு ஆணுடன் வாட்ஸ் அப்பில் கொஞ்சி பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது அவரது இரண்டு குழந்தைகளும் தூங்கிக்கொண்டு இருந்துள்ளன.

மனைவி வேறு ஒரு ஆணுடன் போனில் பேசுவதை கண்டு ஆத்திரம் அடைந்த சோனு தனது மனைவி அஞ்சலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே அடித்து உதைத்ததோடு, மனைவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் சோனு. ஆத்திரத்தின் உச்சத்தில் மனைவி என்றும் பாராமல் கொசுமருந்தை வாயில் எடுத்து ஊற்றி உள்ளார். ஆனால் அவர் சாகவில்லை. இதையடுத்து அருகில் கிடந்த துணியை எடுத்து கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+