சிறிய நகரங்களை மேம்படுத்த ரூ.100 கோடி! ஆஸ்பிரேஷன் திட்டத்திற்கு அனுமதியளித்தது யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய நகர்ப்புற அமைப்புகளை மேம்படுத்த ஆஸ்பிரேஷன் சிட்டி திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அனுமதியளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது ஆஸ்பிரேஷன் சிட்டி திட்டத்தை அறிவித்துள்ளார்.20,000 முதல் 1 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய 100 நகர்ப்புற அமைப்புகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கு யோகி ஆதித்யநாத் கடந்த 12ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.
இதற்கு நகரங்கள் மிக முக்கிய பங்களிக்கும். எனவேதான் இந்த ஆஸ்பிரேஷன் சிட்டி திட்டத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் வரலாற்று ரீதியிலான சிறிய நகரங்களை கணக்கில் கொண்டு அதன் திறனை மேம்படுத்துவதுதான் இலக்காகும். இந்த நகரங்களில் தற்போது மாநில அரசின் திட்டங்கள் மூலம் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆஸ்பிரேஷன் திட்டம் மூலம், மத்திய அரசின் பங்களிப்பும் இந்த நகரங்களின் வளர்ச்சியில் இருக்கும். இதற்காக ஏற்கெனவே ரூ.100 கோடி அளவுக்கு நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications