Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமாஜ்வாடியை விட அதிக வளர்ச்சியை கொடுத்தது பாஜகதான்! முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: சமாஜ்வாடி ஆட்சியை விட பாஜக ஆட்சியில் உத்தரப் பிரதேசம் சிறப்பான வளர்ச்சியை கொடுத்துள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சமீபத்தில் நிதி ஆயோக் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு 2022ஐ வெளியிட்டிருந்தது. இந்த குறியீட்டின்படி, ஏற்றுமதியில் உத்தரப் பிரதேசம் 7வது இடத்தில் இருக்கிறது. இது குறித்து கூறிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "கடந்த காலங்களை விட பாஜக ஆட்சியில் தற்போது உத்தரப் பிரதேசம் வளர்ச்சி பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள கிராமங்களை மேம்படுத்தும் விதமாக தொடங்கப்பட்ட திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

Yogi Adityanath is proud that the BJP regime has given better development to the states than the Samajwadi regime

"இந்த திட்டம் இரண்டு நோக்கங்களுக்கு உதவுகிறது. முதல் நோக்கம் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் சொந்த மண்ணுடன் தொடர்பு படுத்திக்கொள்ள இது ஓர் வாய்ப்பு. இரண்டாவது, இந்த திட்டம் மூலம் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும். தாயும், தாய் நாடும் சொர்க்கத்தைவிட உயர்ந்தது. எனவே மாத்ருபூமி யோஜனா திட்டத்திற்கு அனைவரும் பங்காற்ற வேண்டும்.

முதலில் இந்த திட்டம் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்கள்தான் கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என்று சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் இதில் சில விதிகள் திருத்தப்பட்டு, தனி நபர்கள் கூட இதற்கு பங்காற்றலாம் என்று மாற்றப்பட்டது. இதில் மேலும் சில மாற்றங்கள் கூட செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+