படிப்பு தான் எல்லாம்.. சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டிய இளைஞர் இன்று சிவில் கோர்ட் நீதிபதி! சாதனை கதை!
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் தனது அப்பாவுக்கு உதவியாக பஞ்சர் ஒட்டும் வேலை செய்து வந்த இளைஞர், சிவில் கோர்ட்டில் நீதிபதி ஆகியுள்ளார். குடிசையில் வாழ்ந்தாலும், வானத்தை நோக்கிக் கனவு கண்டு சாதித்துள்ளார் அந்த இளைஞர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பராய் ஹராக் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாஜாத் அகமது. இவர் அப்பகுதியில் சைக்கிள் டியூபுக்கு பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இதோடு இணைந்த பெட்டிக்கடையையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி அப்சானா பேகம் வீட்டிலேயே தையல் மெஷின் வைத்து, அப்பகுதி பெண்களுக்கு துணி தைத்துக் கொடுத்து வருகிறார்.

இவர்களது 3 மகன்களில் இரண்டாவதாகப் பிறந்தவர் அஹத் அகமது. அஹத் அகமது கடந்த 2019ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அலகாபாத் ஐகோர்ட்டில் உள்ள ஒரு வக்கீலிடம் ஜூனியராக சேர்ந்து தனது வாழ்க்கையை தொடங்கினார்.
சட்டம் படித்த அஹத் அகமது நீதிபதி ஆக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், நீதிபதி தேர்வுக்கு பயிற்சி பெற பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்தால் அதிக பணம் செலவாகும் என்பதால் தங்களது குடும்ப பொருளாதார சூழல் காரணமாக தாமதித்து வந்தார்.

இந்நிலையில் இலவச ஆன்லைன் பயிற்சியாளரின் உதவி அவருக்கு கிடைத்தது. அவர் மூலமாக ஆன்லைனில் இலவசமாக பயிற்சி பெற்றார். பயிற்சியை முடித்ததும் அஹத் அகமது நீதிபதி பதவிக்கான தேர்வை எழுதினார். 303 பதவிகளுக்காக நடந்த தேர்வில் அஹத் அகமது 157-வது இடத்தை பிடித்தார். இதையடுத்து அவர் சிவில் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவ்வப்போது, தனது தந்தை ஷாஜாத் அகமதுவுக்கு உதவியாக அவரது கடையில் பஞ்சர் ஒட்டும் வேலையும் செய்து வந்துள்ளார் அஹத் அகமது. படித்துக்கொண்டே பஞ்சர் ஒட்டிய அஹத் அகமது, தற்போது மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டுள்ளது அப்பகுதியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஹத் அகமதுவின் அண்டை வீட்டார், அவரையும் அவரது குடும்பத்தினரையும் வாழ்த்தி அவரது வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். அஹத்தின் வெற்றி அப்பகுதியைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் ஒரு உத்வேகமாக மாறியுள்ளது. குடும்ப நிலைக்கு இடையே பெரிய கனவு கண்டு அதனை நிறைவேற்றியுள்ள அஹத் அகமதுவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள அஹத் அகமது, "எங்கள் வீடு மிகச் சிறிய வீடு. குடிசையில் வசிக்கும் எங்களை பள்ளி, கல்லூரிக்கு அனுப்ப பெற்றோர் போராடினர். ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உண்டு. கல்வியின் மீதுள்ள நம்பிக்கையால் இன்று பலன் அடைந்துள்ளோம்" என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications