Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட கொடுமையே.. இன்ஸ்டாகிராமில் பழக்கம்! காதலனுக்காக மதுரை சிறுமி செய்த காரியம் - பெற்றோர் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

மதுரை: பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக 16 வயது சிறுமியிடம் பழகி 60 சவரன் நகையை மிரட்டி வாங்கியதாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்து இருக்கிறார்கள்.

இன்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வயது வித்தியாசமின்றி அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் முகம் தெரியாத பலரது அறிமுகமும் கிடைத்து பல திருமணங்களும் நடைபெறுகின்றன.

அதற்கு இணையாக மோசடிகளும் அரங்கேறுகின்றன. மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதியினரின் 16 வயது மகள் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

இவர் கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சதீஷ்குமார் என்பவருடன் பழகி வந்துள்ளார்‌. இந்த நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பழகி வந்து இருக்கின்றனர். இந்த நிலையில் சதீஷ்குமார் 16 வயது சிறுமியிடம் பேசி அவரது வீட்டில் உள்ள நகைகளை எடுத்து வருமாறு கூறி இருக்கிறார்.

பெற்றோர் அதிர்ச்சி

பெற்றோர் அதிர்ச்சி

சிறுமியும் சதீஷ்குமார் சொல்வதை கேட்டு வீட்டு பீரோவில் இருந்த நகைகளை கொடுத்துள்ளார். சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலிருந்து எடுத்து வந்த தங்க நகைகளை வாங்கிய சதீஷ்குமார் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டு இருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது.

காவல்நிலையத்தில் புகார்

காவல்நிலையத்தில் புகார்

இது குறித்து மகளிடம் பெற்றோர் தீவிர விசாரணை மேற்கொண்டபோது சதீஷ்குமார் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழகியதாகவும் அவர் கேட்டதால் நகைகளை எடுத்துச் சென்று கொடுத்ததாகவும் ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்,

 60 சவரன் நகை

60 சவரன் நகை

சதீஷ்குமார் என்பவர் எனது மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ரூ.18 லட்சம் மதிப்பிலான 60 சவரன் நகையை மிரட்டி வாங்கியதாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+