ஒரே டிராக்கில் எதிரெதிரே வந்து திகிலூட்டிய ரயில்கள்.. அடுத்து நடந்தது என்ன?
Recommended Video
மதுரை: மதுரை திருமங்கலத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே இரு ரயில்கள் வந்த விவகாரத்தில் ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்பட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் மாலை 5.15 மணிக்கு செங்கோட்டைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. அந்த ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்துக்கு மாலை 5.45 மணிக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காலதாமதமாக வந்தது. இதனால் மதுரை- செங்கோட்டை பயணிகள் ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

கோளாறு
அப்போது கொல்லத்திலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையிலிருந்து குருவாயூர் சென்ற விரைவு ரயிலும் சிக்னல் கோளாறால் நிறுத்தப்பட்டிருந்தது.

நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள்
பின்னர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலும், கொல்லம்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலும் மதுரை புறப்பட்டது. இந்நிலையில் செங்கோட்டையிலிருந்து மதுரை வரும் பாசஞ்சர் ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

குறைந்த வேகத்தில்
நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பயணிகள் ரயில் நிலையத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் குறைந்த வேகத்தில் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. மதுரை பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு திருமங்கலம் நோக்கி வந்துகொண்டிருந்தது. அதேசமயத்தில், திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை செல்ல வேண்டிய பாசஞ்சர் ரெயிலும் புறப்பட்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

விபத்து தவிர்ப்பு
இந்த ரயில் திருமங்கலம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டை கடந்த போது கள்ளிக்குடியிலிருந்து பயணிகள் ரயில் வந்து கொண்டிருப்பது ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ரயில்வே கேட் அருகே அந்த ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பணியிடை நீக்கம்
மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நேற்று சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சிவசிங்மீனா, இயக்க கட்டுப்பாட்டாளர் முருகானந்தம் ஆகிய 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து கோட்ட மேலாளர் லெனின் உத்தரவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications