செம.. ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை.. மத்திய அரசு ஆச்சர்ய தகவல்!
ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று மத்திய தொல்லியல் துறை ஆச்சர்ய தகவலை வெளியிட்டு இருக்கிறது.
Recommended Video

மதுரை: ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று மத்திய தொல்லியல் துறை ஆச்சர்ய தகவலை வெளியிட்டு இருக்கிறது.
உலகின் பழமையான நகரங்களில் ஆதிச்சநல்லூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களை பிரம்மிப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.
தூத்துக்குடியில் உள்ள இந்த பழமையான நகரத்தில் இதுவரை செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் எல்லாம் நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது இங்கு எடுக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுகிறது. புதிதாக அங்கு அகழ்வாராய்ச்சி எதுவும் நடக்கவில்லை.

வழக்கு தொடுத்தார்
இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்று தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த பொதுநல வழக்கில், ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கும்படி மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது. மத்திய தொல்லியல் துறைக்கு இது தொடர்பான ஆணையை பிறப்பித்து இருந்தது.

என்ன பதில்
அதன்படி தற்போது ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று மத்திய தொல்லியல் துறை ஆச்சர்ய தகவலை வெளியிட்டு இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வருவதாக கூறப்பட்டு இருக்கிறது.

என்ன
இரண்டு பொருட்களில் செய்யப்பட்ட சோதனைகளில் இது தெரிய வந்தது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரு பொருள்களில் ஒன்று கி.மு.905, மற்றொன்று கி.மு.971 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. கார்பன் சோதனை மூலம் இதன் வயது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

என்ன கேள்வி
இதையடுத்து ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்குமா என தொல்லியல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதில் யார் பணிகளை தொடர போவது என்பது தொடர்பாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications