அடடே.. உண்டியலில் சேமித்த ரூ.1,000-ஐ மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு வழங்கிய 4 வயது குட்டி பாப்பா!
மதுரை: தேர்தல் பிரசார பணிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய்.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியும், 4 வயது சிறுமியும் பொன்னுத்தாய்க்கு நிதியுதவி அளித்ததுதான் தற்போது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
4 வயது சிறுமியான தன்யாஸ்ரீ, தனது தாத்தா அன்றாடம் கொடுக்கும் பணத்தை உண்டியல் சேமித்த வகையில் கிடைத்த ஆயிரம் ரூபாயை தேர்தல் நிதியாக அளித்தார்.

தீவிர வாக்கு வேட்டை
தமிழக தேர்தல் களத்தில் மக்களின் வாக்குகளை இழுக்க வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சில வித்தியாசமான முயற்சிகளையும், யுக்திகளையும் கையாண்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். அப்படியும் வசியப்படுத்த முடியவில்லை என்றால் சில வேட்பாளர்கள் பணம் கொடுத்தும் மக்களை விலைக்கு வாங்கி வருவதாகவும் கூறப்டுகிறது.

வித்தியசமான மார்க்சிஸ்ட் வேட்பாளர்
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலைமை இப்படி இருக்க தமிழக தேர்தல் களத்தில் வித்தியாசமான வேட்பாளராக வலம் வருகிறார் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய். தேர்தல் பிரசார பணிகளுக்கு கூட பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார் பொன்னுத்தாய்.

பொதுமக்கள் நிதியுதவி
பொதுமக்களும் தாமாக முன்வந்து மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் அவருக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இப்படி பெரியவர்கள் நிதியுதவி அளிக்க, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியும், 4 வயது சிறுமியும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய்க்கு நிதியுதவி அளித்ததுதான் தற்போது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

4 வயது சிறுமி நிதியுதவி செய்தார்
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் சுப்பையா என்பவரின் பேத்தியான பத்தாம் வகுப்பு மாணவி சுகன்யா தான் சேமித்து வைத்திருந்த ரூ.2 ஆயிரம் பணத்தை தேர்தல் நன்கொடையாக அளித்தார்.இதேபோல் அவனியாபுரத்தில் பெட்டிக்கடை நடத்தும் திமுகவ உறுப்பினர் முருகன் என்பவரின் பேத்தி 4 வயது சிறுமியான தன்யாஸ்ரீ, தனது தாத்தா அன்றாடம் கொடுக்கும் பணத்தை உண்டியல் சேமித்த வகையில் கிடைத்த ஆயிரம் ரூபாயை தேர்தல் நிதியாக அளித்தார். சிறுமி தன்யாஸ்ரீரியை பொன்னுத்தாய் உச்சி முகர்ந்து பாராட்டியது அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.












Click it and Unblock the Notifications