மதுரை மக்களே! இன்று வெளியே செல்லும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க! பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்
மதுரை: தென்மாவட்ட மாணவர்கள், போட்டி தேர்வாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோருக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறக்கப்படுகிறது. இந்நிலையில், நகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரைக்கு என பல அடையாளங்கள் இருக்கின்றன. இத்துடன் புது அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் உருவாகியுள்ளது. புதுநத்தம் சாலையில், தரைதளத்துடன் கூடிய 6 தளங்கள் கொண்ட இந்த நூலகம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவடைந்தது. ரூ.215 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த நூலகம் தென்மாவட்ட மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதனையொட்டி நகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, "மதுரை-புதுநத்தம் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா, பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலையில் வருகை தருகிறாா். இதை முன்னிட்டு, நகரில் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் லாரிகள் ஆகியவற்றின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
நூலகத் திறப்பு விழா நடைபெறும் நத்தம் சாலையில் ஐஓசி ரவுண்டானா சந்திப்பு முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரை வாகனப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்படுகிறது. இந்த வழியாக வரும் வாகனங்கள் ஐஓசி ரவுண்டானா, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு, தாமரைத் தொட்டி, கோ.புதூா், மூன்றுமாவடி வழியாக ஐயா்பங்களா சந்திப்பு புதுநத்தம் சாலைக்குச் செல்லலாம். இதேபோல, நத்தம் சாலையில் இருந்து மூன்றுமாவடி, கோ.புதூா் வழியாக மதுரை நகரின் உள்பகுதிக்கு வரலாம்.

காலை 9 மணி முதல் கப்பலூா் சந்திப்பிலிருந்து சுற்றுச் சாலை வழியாக நகா் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கப்பலூா், தோப்பூா் வழியாக திண்டுக்கல் சாலையில் செல்ல வேண்டும். மேலும், காலை 9 மணி முதல் கப்பலூா் சந்திப்பிலிருந்து சுற்றுச் சாலை வழியாக நகா் நோக்கி வரும் அனைத்துப் பேருந்துகளும் தோப்பூா், திருநகா், திருப்பரங்குன்றம் வழியாக மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கு வர வேண்டும்.
அருப்புக்கோட்டை, தூத்துக்குடி பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் வலையங்குளம், சாமநத்தம், பொட்டப்பாளையம், கீழடி வழியாக ராமேசுவரம் சாலையை அடைந்து விரகனூா் சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணிக்கு வர வேண்டும். தூத்துக்குடி, அருப்புக்கோட்டை சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு, கனரக வாகனங்களும் கப்பலூா் சென்று திண்டுக்கல் சாலையில் வர வேண்டும்" என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications