Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை மக்களே! இன்று வெளியே செல்லும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க! பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தென்மாவட்ட மாணவர்கள், போட்டி தேர்வாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோருக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறக்கப்படுகிறது. இந்நிலையில், நகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரைக்கு என பல அடையாளங்கள் இருக்கின்றன. இத்துடன் புது அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் உருவாகியுள்ளது. புதுநத்தம் சாலையில், தரைதளத்துடன் கூடிய 6 தளங்கள் கொண்ட இந்த நூலகம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவடைந்தது. ரூ.215 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த நூலகம் தென்மாவட்ட மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

A change in traffic has been announced as the Madurai kalaignar Centenary Library is about to open

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதனையொட்டி நகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, "மதுரை-புதுநத்தம் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா, பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலையில் வருகை தருகிறாா். இதை முன்னிட்டு, நகரில் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் லாரிகள் ஆகியவற்றின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

நூலகத் திறப்பு விழா நடைபெறும் நத்தம் சாலையில் ஐஓசி ரவுண்டானா சந்திப்பு முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரை வாகனப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்படுகிறது. இந்த வழியாக வரும் வாகனங்கள் ஐஓசி ரவுண்டானா, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு, தாமரைத் தொட்டி, கோ.புதூா், மூன்றுமாவடி வழியாக ஐயா்பங்களா சந்திப்பு புதுநத்தம் சாலைக்குச் செல்லலாம். இதேபோல, நத்தம் சாலையில் இருந்து மூன்றுமாவடி, கோ.புதூா் வழியாக மதுரை நகரின் உள்பகுதிக்கு வரலாம்.

 A change in traffic has been announced as the Madurai kalaignar Centenary Library is about to open

காலை 9 மணி முதல் கப்பலூா் சந்திப்பிலிருந்து சுற்றுச் சாலை வழியாக நகா் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கப்பலூா், தோப்பூா் வழியாக திண்டுக்கல் சாலையில் செல்ல வேண்டும். மேலும், காலை 9 மணி முதல் கப்பலூா் சந்திப்பிலிருந்து சுற்றுச் சாலை வழியாக நகா் நோக்கி வரும் அனைத்துப் பேருந்துகளும் தோப்பூா், திருநகா், திருப்பரங்குன்றம் வழியாக மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கு வர வேண்டும்.

அருப்புக்கோட்டை, தூத்துக்குடி பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் வலையங்குளம், சாமநத்தம், பொட்டப்பாளையம், கீழடி வழியாக ராமேசுவரம் சாலையை அடைந்து விரகனூா் சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணிக்கு வர வேண்டும். தூத்துக்குடி, அருப்புக்கோட்டை சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு, கனரக வாகனங்களும் கப்பலூா் சென்று திண்டுக்கல் சாலையில் வர வேண்டும்" என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+