ரூ. 20 ஆயிரத்தோடு காணாமல் போன பை.. முதியவருக்கு உதவிய ஆசிரியர்.. மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
மதுரை: மதுரையில் முதியவர் ஒருவர் தவறவிட்ட 20 ஆயிரம் ரூபாயை போலீசார் உதவியுடன் ஆசிரியர் ஒருவர் அவரிடம் கொண்டு சேர்த்த நிகழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
மதுரை விளாச்சேரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஜலீல் என்பவர் வங்கிக்கு பணம் போடுவதற்காக சென்று இருக்கிறார். பைக்கில் சென்ற அவர் வெள்ளை நிற பையில் 20 ஆயிரம் பணம் வைத்துள்ளார்.
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வங்கி கணக்கில் போடுவதற்காக எடுத்து சென்றுள்ளார். ஆனால் போகும் வழியிலேயே பண பை அவரின் பைக்கில் இருந்து தவறி விழுந்துள்ளது.

முக்கிய ஆவணம்
இதில் பணம் மட்டுமின்றி முக்கியமான பல ஆவணங்கள் இருந்துள்ளது. அவரின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகிவையும் கூட இதில் இருந்துள்ளது. பணத்தை தொலைத்துவிட்டு ஜலீல் அதை நீண்ட நேரம் சாலையில் தேடி இருக்கிறார். பணத்தை தொலைத்த விரக்தியில் அவர் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்.

போலீசார்
இந்த நிலையில் இன்னொரு பக்கம் அந்த பணப்பையை சாலையில் கண்டு எடுத்து இருக்கிறார் ஆசிரியர் ரமேஷ்பாபு. இவர் தனக்கன்குளம் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். பணப்பையை பார்த்ததும் உடனடியாக அதை போலீசிடம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். எந்த யோசனையும் இன்றி உடனே அதை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீஸ் என்ன செய்தனர்
இதையடுத்து போலீசார் மூலமா அந்த ஆதார் கார்டில் இருக்கும் எண்ணுக்கு போன் செய்து ஜலீலுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. உங்கள் பணம் இங்கேதான் இருக்கிறது. வாருங்கள் என்று அவருக்கு தெரிவிக்கவிக்கப்பட்டது. அப்போது திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாரமணி அங்கு பணியில் இருந்துள்ளார். அவர்தான் தகவலை தெரிவித்துள்ளார்.
Recommended Video

பாராட்டு பெற்றார்
இதையடுத்து அங்கு வந்த ஜலீல் போலீசாரிடம் இருந்து பையை பெற்றுக்கொண்டார். அவரின் பையில் 20 ஆயிரம் ரூபாயில் ஒரு ரூபாய் கூட குறையாமல் அப்படியே இருந்தது. போலீசாருக்கும் அந்த ஆசிரியருக்கும் இதனால் ஜலீல் நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் மதுரையில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications