Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி 18 தாய்மாமன்கள் தினம்.. தாய்க்கு சமமான தாய்மாமன்களுக்கு மரியாதை செய்யும் மகத்தான நாள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தொப்புள் கொடி உறவுக்கு அடுத்தபடியாக தொட்டில் முதல் மணமேடை வரை தொடரும் ஒரு உறவு உண்டு என்றால் அது தாய்மாமன் உறவுதான். தமிழகத்தில் தாய்மாமன் உறவை போற்றுவதைப் போல வேறு எங்கும் கொண்டாடி மகிழ்வதில்லை.

அன்னையர் தினம், தந்தையர் தினம், சகோதரர்கள் தினம் கொண்டாடி மகிழ்கின்றனர். ஏன் சில நேரங்களில் கொழுந்தியாள் தினம் கூட இன்றைய கால கட்டத்தில் கொண்டாடுகின்றனர். தாய்க்கு சமமான உறவு உண்டு என்றால் அது தாய்மாமன்தான் அந்த தாய் மாமனுக்கு மரியாதை செய்வதற்காகவே தாய்மாமன் தினம் தமிழக தென் மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது.

உடன் பிறந்த தங்கைக்கோ... அக்காவிற்கோ பிள்ளை பிறந்தால் முதல் ஆளாய் சீர் கொண்டு வருவது தாய் மாமன்தான். பிள்ளை பிறந்த உடன் குழந்தையின் நாக்கில் சீனி தண்ணீர் தொட்டு வைப்பதில் தொடங்குகிறது தாய் மாமன் உறவு.

தாய் மாமன் உரிமை

தாய் மாமன் உரிமை

மடியில் அமரவைத்து மொட்டையடித்து காது குத்துவது தொடங்கி பெண் குழந்தைகள் என்றால் வயது வந்த உடன் குடிசை கட்டுவது வரை தாய் மாமன் உறவை யாராலும் விட்டுத்தர முடியாது. கிழக்கு சீமையிலே படத்தில் வரும்...தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி... பாடல்தான் எந்த விஷேசம் என்றாலும் பல ஆண்டு காலமாக பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

மாமனுக்கு மரியாதை

மாமனுக்கு மரியாதை

தென்மாவட்டங்களில் தாய்மானுக்கு என்று தனி மரியாதையே உள்ளது. தாய்க்கு நிகராக உரிமை கொண்டாடும் தாய்மாமன்தான் எல்லாமே. எந்த ஒரு விசயத்திற்காகவும் தாய் மாமனை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுக்கொடுத்து விட மாட்டார்கள். மண மேடையில் மாப்பிள்ளையோ பெண்ணோ கழுத்தில் மண மாலையை போடுவது தாய்மாமன்தான்.

உரிமையான உறவு

உரிமையான உறவு

பிறந்த பிள்ளைய திருமணம் செய்து கொடுக்கும் போது தாய்மாமன் சம்மதம் சொன்னால்தான் நிச்சயமே நடக்கும். அந்தளவுக்கு தாய்மாமன் உறவு வலுவானது. தாய்மாமான் வீட்டு சீதனம் முக்கியமானது. எத்தனையோ பேர் சீர் செய்தாலும் ஊர் மெச்ச தாய் மாமன் செய்யும் சீர்தான் சபையை நிறைக்கும். எத்தனையோ சொந்தங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்தாலும் தாய்மாமன் வந்தால்தான் வீடு நிறையும்.

விட்டுப்போகாத சொந்தம்

விட்டுப்போகாத சொந்தம்

ஆடி பதினெட்டாம் பெருக்கன்று தாய் மாமன் தினமாக கொண்டாடும் மக்கள் அந்த தாய் மாமனுக்கு கிடா விருந்து எல்லாம் வைத்து அமர்களப்படுத்துகின்றனர். தாய் மாமன் காலில் விழுந்தும் ஆசி பெற்றுக்கொள்கின்றனர். எத்தனை எத்தனை உறவுகள் இருந்தாலும் விட்டுப்போகாத சொந்தம்தான் தாய் மாமன் பந்தம் என்று சொல்லி மகிழ்க்கின்றனர் தமிழக பெண்கள். தனது சகோதரன் உயிரிழந்து விட்டான் என்பதற்காக அவரைப்போலவே மெழுகுச்சிலை செய்து தாய் மாமனின் உறவை புரிய வைத்தவர்கள் தென் மாவட்ட பெண்கள். சும்மாவா சொன்னாங்க தாய் மாமன் உறவுங்கிறது தாய்க்கு சமமான உறவு என்று. தாய்மாமனை போற்றும் அனைவருக்கும் இனிய தாய் மாமன் தின நல் வாழ்த்துக்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+