வார்னிங்.. டிஎஸ்பியின் ஒற்றை வார்த்தை! ஊர்வலத்தை கைவிட்டு கலைந்த அதிமுகவினர்! மதுரையில் பரபர சம்பவம்
மதுரை: மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இன்று அதிமுகவினர் வாகனங்களில் ஊர்வலம் சென்றபோது டிஎஸ்பி திடீரென தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்த நிலையில் தொண்டர்கள், நிர்வாகிகள் கலைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை அதிமுக தீவிரமாக தொடங்கி உள்ளது. சமீபத்தில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.

இந்நிலையில் தான் மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. ஓ பன்னீர் செல்வம் நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தென்மாவட்டத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாட்டை எடப்பாடி பழனிச்சாமி நடத்த உள்ளார்.
இந்த மாநாட்டில் 10 லட்சம் பேரை திரட்ட எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளார். தற்போது மதுரையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மதுரை விமான நிலையம் அருகே மாநாட்டுக்கான பணிகள் 65 ஏக்கரில் நடைபெற்று வருகிறது.
மேலும் 35 ஏக்கரில் சமையலறை, உணவு விநியோக மையங்கள் அமைக்கப்படுகின்றன. 25 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது வெயில் என்பது மதுரையில் அதிகமாக உள்ளது. இதனால் தொண்டர்களுக்காக 5 லட்சம் சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் மாநாட்டில் பங்கேற்க வரும்படி மதுரையில் அதிமுக சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் இன்று பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் மாநாட்டுக்கான விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களை அழைத்தார்.
இந்த வேளையில் அதிமுகவினர் பைக்கில் மாநாடு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்றார். அப்போது டிஎஸ்பி வசந்த குமார் தடுத்து நிறுத்தினார். நடுரோட்டில் அதிமுகவினர் பைக்குடன் அப்படியே நின்றனர். இதையடுத்து அனுமதியின்றி ஊர்வலம் செல்வது சட்டப்படி குற்றம். மீறினால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார். இதையடுத்து அதிமுகவினர் பைக் ஊர்வலத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே!












Click it and Unblock the Notifications