திருமங்கலம், சாத்தூர்.. 2 தொகுதிகளில் குடைச்சல் கொடுக்கும் சசிகலா! தப்பிப்பார்களா நயினார், உதயகுமார்
மதுரை: திருமங்கலம் மற்றும் சாத்தூர் தொகுதிகளில் சசிகலா தரப்பில் களமிறக்கப்பட்டுள்ள ஜீவிதா நாச்சியார் மற்றும் இசக்கி ராஜா ஆகிய இருவரும் அதிமுக மற்றும் பாஜகவுக்கு சவால் அளிப்பது தெரிய வந்துள்ளது. அதிமுக ஆதரவு வாக்குகள் பிரியும் பட்சத்தில் அங்கு திமுகவுக்கு சாதகமான சூழல் உருவாகி வருவதாக பார்க்கப்படுகிறது.
2021 சட்டசபைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார். இருந்தாலும் இந்த தேர்தலில் சாத்தூர் தொகுதிக்கு மாறி இருக்கிறார். முக்குலத்தோர் சமூக வாக்குகள் சாத்தூர் தொகுதியில் கணிசமாக இருந்தாலும், நயினார் நாகேந்திரன் மீது அந்த தொகுதி மக்களுக்கு நம்பிக்கை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் திமுக சார்பாக நாயுடு சமூகத்தைச் சேர்ந்த கடற்கரை ராஜ் களத்தில் இருக்கிறார். அதேபோல் சசிகலா தரப்பில் இசக்கி ராஜா என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் முக்குலத்தோர் சமூக அமைப்பு வைத்திருப்பதால், நயினார் நாகேந்திரனுக்கு சவால் அளிப்பார் என்று கருதப்படுகிறது. அதேபோல் விஜய் தரப்பில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த அஜித் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதனால் முக்குலத்தோர் சமூக வாக்குகள் பிரியும் என்று கணக்கிடப்படுகிறது. இருந்தாலும் நயினார் நாகேந்திரனின் இரு மகன்களும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே சாத்தூர் தொகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கீழ் பணியாற்ற மிகப்பெரிய குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
இதனால் சசிகலா தரப்பு வேட்பாளர் பிரிக்கும் வாக்குகளை பொறுத்தே நயினாரின் வெற்றி இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு சசிகலா செக் வைத்துள்ளார். அமமுகவில் மாநில இளைஞரணி பொறுப்பில் இருந்தவர் தான் ஜீவிதா நாச்சியார். வழக்கறிஞரான இவர், அமமுகவில் சீட் கிடைக்காது என்பதை அறிந்து சசிகலா பக்கம் தாவினார்.
ஏற்கனவே திமுக சார்பாக சேடப்பட்டி மணிமாறன் ஆர்பி உதயகுமாருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார். தற்போது பிரச்சாரத்தில் ஜீவிதா நாச்சியாரும் சுழன்று வருவதால், திருமங்கலத்தில் ஆர்பி உதயகுமார் கரை சேர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்த இரு தொகுதிகளிலும் திமுகவின் களப்பணியை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும் என்றும் பார்க்கப்படுகிறது.
-
ஒற்றைத் தலைமை ரெடி! எம்ஜிஆர் - ஜெயலலிதா பலத்தை எட்டிவிட்டாரா எடப்பாடி? -
யாரையெல்லாம் நம்புகிறேனோ.. எல்லாம் துரோகியா இருக்காங்க.. கலங்கிய ராமதாஸ்.. ஓட்டம் பிடித்த புள்ளி -
ரூ.1,302 கோடி.. தமிழக தேர்தல் நடத்த எத்தனை கோடிகள் ஒதுக்கீடு? அர்ச்சனா பட்நாயக் கொடுத்த பதில்! -
விஜய் பக்கம் திரும்பும் செளராஷ்டிரா வாக்குகள்.. அதிமுக, பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சி! கள நிலவரம் என்ன? -
"ஜாதி பார்த்து வேட்பாளர்.. விசுவாசிகளுக்கு சீட் இல்லை” சசிகலா கட்சிக்குள் கொதிப்பு! கடுப்பில் தலைகள் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்!












Click it and Unblock the Notifications