Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை வந்த ஓபிஎஸ்... “மாஸ்” வரவேற்பு கொடுத்த தொண்டர்கள் - அலைகடல்போல் ஆதரவாளர்கள் - செம சவுண்டு

Subscribe to Oneindia Tamil

மதுரை: சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

Recommended Video

    மதுரை வந்த ஓபிஎஸ்... “மாஸ்” வரவேற்பு கொடுத்த தொண்டர்கள் - அலைகடல்போல் ஆதரவாளர்கள் - செம சவுண்டு

    ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

    ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

    பொதுச்செயலாளர் எடப்பாடி

    பொதுச்செயலாளர் எடப்பாடி

    அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை நீக்கினார் ஓ.பன்னீர்செல்வம்.

    வழக்கு விசாரணை

    வழக்கு விசாரணை

    இருப்பினும் இதற்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஓ.பன்னீர்செல்வம் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் அடுத்தடுத்து தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தார்.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்தித்து பேச பிரதமர் மோடி நேரம் ஒதுக்காத நிலையில், டெல்லி மேலிடம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இத்தகைய சூழலில் கடந்த 28 ஆம் தேதி சென்னை பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமிக்கும், வழியனுப்ப ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது.

    சொந்த ஊர் நோக்கி

    சொந்த ஊர் நோக்கி

    இந்த நிலையில், தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்புக்கே அழைப்பு வந்ததாக செய்திகள் வெளியாகின. அதே நேரம் இரு தரப்பினரும் தங்கள் பிரதிநிதிகளை அறிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு சென்றார்.

    உற்சாக வரவேற்பு

    உற்சாக வரவேற்பு

    இதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை விமான நிலையத்தில் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான தென் மாவட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், மலர் மாலை அணிவித்தும் ஆதரவு முழக்கங்களை எழுப்பியும் அவரை வரவேற்றார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+