Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மடப்புரம் அஜித்குமார் கொலை.. நிகிதாவை நெருக்கும் சிபிஐ.. மார்ச் 4ல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மடப்புரம் அஜித்குமார் காவல் நிலைய கொலை வழக்கில் பொய் புகார் அளித்தது தொடர்பாக நிகிதா மார்ச் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகைத் திருட்டு புகார் பொய் என்பதை சிபிஐ உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகவிருப்பது விவாதமாகி இருக்கிறது.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மடப்புரம் கோயிலுக்கு வந்த நிகிதா என்பவர் அளித்த நகைத் திருட்டு புகாரில் பெயரில் அஜித்குமார் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த விசாரணையின் போது காவல் துறை கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார்.

AjithKumar Death

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அஜித் குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அதேபோல் விசாரணைக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனிடையே அஜித்குமார் மரண வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். ஜூலை மாதத்தில் இருந்தே சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனிடையே நிகிதா அளித்த நகைத் திருட்டு புகாரின் உண்மைத்தன்மையும் குறித்த கேள்விகளும் எழுந்தது.

இதனிடையே சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் நிகிதா அளித்த நகைத் திருட்டு புகார் பொய் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த புகார் முடித்து வைக்கப்பட்டது என்றும், அதுதொடர்பாக 90 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்து வருவதாகவும் கூறினர். இதனால் நீதிபதி, புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிகிதாவை அழைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டிய சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் மார்ச் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நிகிதாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதனால் பொய் புகார் அளித்த நிகிதா கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே நிகிதாவிடம் சிபிஐ தங்களின் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திவிட்டது. தற்போது நிகிதாவை நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் நிகிதா மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அஜித்குமார் குடும்பத்தினரும் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+