திருப்பரங்குன்றம் சம்பவம்: பக்தர்களின் நம்பிக்கையை திமுக அரசு உடைத்துள்ளது! - அண்ணாமலை
மதுரை: திருப்பரங்குன்றத்தில் நீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகும் தீபம் ஏற்ற மறுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் திமுக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களின் நம்பிக்கையை உடைத்திருக்கிறது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில், "திமுக அரசின் சனாதன தர்மத்தின் மீதான விரோதம் பற்றி இனி விளக்க அவசியமில்லை. அது ஒரு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்து பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் மலையில் புனித கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்தச் செயல் நமது மக்களின் நம்பிக்கையின் மையத்தை தாக்குகிறது.

இன்று, நூற்றுக்கணக்கான காவல்துறையினரை போட்டு, பக்தர்கள் மதச் சடங்குகளைச் செய்வதைத் தடுத்து நிறுத்துவதன் மூலம், திமுக ஆட்சி அதன் திருப்திப்படுத்தும் அரசியலில் முழுமையாக இறங்கியிருக்கிறது.
சனாதன தர்மம் ஏன் மீண்டும் மீண்டும் தனிமைப்படுத்தப்படுகிறது என்பதற்கு திமுக பதிலளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு மீது இந்த அரசுக்கு எந்த மரியாதையும் இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக பாஜக இளைஞரணி தலைவர் எஸ்ஜி சூர்யா, "திருப்பரங்குன்றத்தில் முருகனை கும்பிட வந்த அப்பாவி பக்தர்கள் மீது காவல்துறை நடத்திய வெறித்தனமான தாக்குதலுக்கு எனது கடும் கண்டனங்கள்! இந்துக்கள் என்றாலே இந்த தி.மு.க அரசுக்கு ஏன் இவ்வளவு கசப்பு? பக்தர்களை ஏதோ தீவிரவாதிகள் போல விரட்டி விரட்டி அடிப்பதுதான் உங்கள் '#திராவிடமாடல்' ஆட்சியா?
காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி, பக்தர்களின் நம்பிக்கையை மிதிக்கும் மு.க.ஸ்டாலின் அரசே, மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். இதற்கான விலையை நீங்கள் கொடுத்தே தீர வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications