அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா? சட்டென வந்த கேள்வி.. நயினார் நாகேந்திரன் கொடுத்த விளக்கம்!
மதுரை: தமிழக பாஜகவின் தலைவராக இருந்த அண்ணாமலை, தனிக்கட்சி தொடங்க மாட்டார் என்று நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அண்ணாமலை விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தொடர்ந்து பேசப்பட்டு வரும் சூழலில், அண்ணாமலை பாஜகவில் தான் இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை இருவருக்கும் மோதல் முற்றி வருகிறது. தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்ட பின், அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக உடனான பாஜகவின் கூட்டணியில் தனக்கு விருப்பமில்லை என்று அண்ணாமலை தொடர்ச்சியாக பேசி வந்தார்.

அமித்ஷாவுக்கு கொடுத்த வாக்குக்காக அமைதி காக்கிறேன் என்றும், அதிமுக தலைவர்கள் என்னை சீண்ட வேண்டாம் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதேபோல் தமிழக பாஜகவின் நிர்வாகிகளுக்கும், அண்ணாமலைக்கும் இடையிலான மோதல் அதிகரித்துக் கொண்டே சென்றது. அண்ணாமலையின் வார் ரூம் இதற்கு முதன்மை காரணமாகவும் பார்க்கப்பட்டது.
இதனிடையே நான் பேசுவதற்கான காலம் வெகு விரைவில் வரும்.. அப்போது பேசுவேன் என்று அண்ணாமலை சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. புதிய கட்சியை அண்ணாமலை தொடங்குகிறாரா என்ற விவாதமும் தொடர்ந்து தமிழக அரசியல் வட்டத்தில் நடந்து வருகிறது. நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் அண்ணாமலை தனிக் கட்சி தொடங்குவார் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணாமலை புதியக் கட்சி தொடங்குவது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்றுதான் அமித்ஷா வலியுறுத்தி வருகிறார் என்றார்.
தொடர்ந்து, அண்ணாமலை கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர். இப்போதும் கட்சியில் தான் இருக்கிறார். இப்போது நான் மாநிலத் தலைவராக இருக்கிறேன். நாளை மாநிலத் தலைவராக இல்லாமலும் இருக்கலாம். அதற்காக நான் தனிக்கட்சி தொடங்க மாட்டேன்.. அவரும் தொடங்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அண்ணாமலை பெயரில் மன்றம் தொடங்கப்பட்ட போதே அண்ணாமலை, இது முறையல்ல என்று நிர்வாகிகளுக்கு வார்னிங் கொடுத்திருந்தார். ஆனால் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் உடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். இதனால் சட்டசபைத் தேர்தலுக்கு முன் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications