கஞ்சாவுடன் முதல்வரை சந்திக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது.. மதுரையில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுக்க கஞ்சா பொட்டலத்துடன் பாஜக நிர்வாகி வந்ததை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் ஓய்வு எடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

BJP Activist arrested for giving petition to CM Stalin with Kanja

இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு வந்தார். மதுரையில் இருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள விடுதியில் தனது குடும்பத்தினருடன் தங்குகிறார்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினை சந்திக்க பாஜக நிர்வாகி சங்கர பாண்டி என்பவர் வந்திருந்தார். அவர் கையில் கஞ்சா பொட்டலங்களுடன் மனு கொடுக்க வந்திருந்தார். உடனே அவரை போலீஸார் கைது செய்தனர்.

BJP Activist arrested for giving petition to CM Stalin with Kanja

கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க வந்த சங்கரபாண்டி பாஜக ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்க கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததாக சங்கரபாண்டி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+