அதிமுக கூட்டணியை முடிவு செய்ய வேண்டியது மாநிலத் தலைவர் அல்ல.. உடைத்து பேசிய எச்.ராஜா!
அதிமுக உடனான கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது மாநில தலைவரோ, நிர்வாகிகளோ அல்ல என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
மதுரை: அதிமுக உடனான கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது மாநில தலைவரோ, நிர்வாகிகளோ அல்ல என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து பாஜகவின் நாடாளுமன்றக்குழு மட்டுமே விவாதித்து முடிவு செய்யும் என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும்.

அண்ணாமலை பேச்சு
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வரும் மே மாதம் 10ஆம் தேதி வரை கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருப்பேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன் என்று தெரிவித்தார்.

டெல்லி செல்லும் அண்ணாமலை
இதனால் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி உடைகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் கருத்து அவரின் சொந்த கருத்து என்று நயினார் நாகேந்திரன் கூறினார். இருப்பினும் அண்ணாமலை, டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

எச். ராஜா பேட்டி
இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கடந்த இரண்டு நாட்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பற்றியோ ராஜினாமா என்று கூறியதோ அனைத்துமே பத்திரிகையாளர்களை சந்தித்து கூறாத விஷயங்கள். அவை கசிந்த வார்த்தைகளே தவிர அவர்கள் முறையாக கூறியது அல்ல. எனவே இதை பெரிதும் பொருட்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

பாஜக நாடாளுமன்றக் குழு முடிவு
தொடர்ந்து, பாஜகவின் கூட்டணி பற்றியோ வேட்பாளர்கள் பற்றியோ மாநிலத் தலைவர்கள் முடிவு செய்ய முடியாது. கூட்டணி குறித்தும் வேட்பாளர்கள் குறித்தும் மத்திய பாஜக முடிவு தான் இறுதியானது. அதிமுக உடனான கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது மாநில தலைவரோ, நிர்வாகிகளோ அல்ல. இது குறித்து பாஜகவின் நாடாளுமன்றக்குழு மட்டுமே விவாதித்து முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

கட்டுக்கதைகளை பரப்ப வேண்டாம்
இப்போது எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி பூத் கமிட்டி உருவாக்கும் பணி மட்டுமே எனவே நாங்கள் அதை மேற்கொள்ள இருக்கிறோம். பாஜகவின் ஆதரவாளர்களும் சரி, தொண்டர்களும் சரி முழுமையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன்னதாக ஏதும் கட்டுக்கதைகளை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள்












Click it and Unblock the Notifications