தேவர் குரு பூஜைக்கு வரும்.. எடப்பாடியை சூழ்ந்த பவுன்சர்கள்.. கிட்ட நெருங்க முடியாது.. பதறிய அதிமுக
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர் தாக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அவர் மீது தாக்குதல் அச்சம் நிலவுவதால், 50க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். இவரை குருபூஜைக்கு வரவேற்று கடிதம் கூட ஆர் பி உதயகுமார் எழுதி உள்ளார். தனது ரத்தம் மூலம் அவர் கையெழுத்து போட்டுள்ளார்.

எச்சரிக்கை; இதை ஏற்றுக்கொண்டு தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சசிகலா ஆதவாளர் தேனி கர்ணன் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் தனது பேட்டியில், முக்குலத்தோர் பிரிவினருக்கு தலைவர்கள் சசிகலா, ஓ பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர்தான். தேவையின்றி எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்று அசிங்கப்பட கூடாது. அங்கே சென்றால் அவருக்கு அசிங்கம் மட்டுமே ஏற்படும். இவரை ஒரு காலத்திலும் முக்குலத்தோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . அதிகாரம் உங்களிடம் இருக்கலாம். தங்க கவசம் இருக்கலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கே வரவேற்பு கிடைக்காது.
குரு பூஜை நடக்கும் கோவிலுக்கு.. சந்நிதிக்கு அவர் செல்ல முடியாது. அப்படி செல்ல முயன்றால் அவருக்கு அசிங்கம்தான் ஏற்படும். எதிர்க்கட்சி தலைவருக்கு அடி விழுந்தால் அவருக்கு அசிங்கம். தமிழ்நாட்டிற்கும் அசிங்கம். அதை ஏற்றுக்கொள்ள எடப்பாடி தயாராக இருக்க வேண்டும். அவரை முக்குலத்தோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அதை எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும். மற்றபடி எனக்கு பலம் இருக்கிறது நான் போவேன் என்று இருக்க கூடாது.
உங்கள் சகாக்கள் வேண்டுமானாலும் போகலாம். மக்கள் மன்னித்து விடுவார்கள். ஆனால் நீ போக கூடாது. மீறி சென்றால் நிலைமை உனக்கு எதிராக செல்லும். உன்னுடன் இருக்கும் துரோகிகளை மக்கள் மன்னிப்பார்கள். அவர்கள் காசுக்கு விலை போனவர்கள். ஆனால் உன்னை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். முக்குலத்தோர் சொந்தங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அழைப்பு; இந்த நிலையில்தான் தேவர் குரு பூஜை விழாவில் என்ன நடந்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறாராம். இதற்காக அவர் 5000 பேரை கொங்கு , வடக்கு மண்டலத்தில் இருந்தும் இறக்க உள்ளாராம். தனக்கு பாதுகாப்பாக தன்னை சுற்றி இருக்குமாறு 5000 பேரை கொண்டு வர தனக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
பவுன்சர்கள்: குரு பூஜை விழாவில் என்ன நடந்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற முடிவை எடப்பாடி எடுத்ததே இதற்கு காரணம் என்கிறார்கள். இந்த நிலையில்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர் தாக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அவர் மீது தாக்குதல் அச்சம் நிலவுவதால், 50க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications