Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும்.. எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு.. மதுரையில் வழக்குப்பதிவு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் இருக்கும் தலிபான் அரசை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் பேசி இருந்தார்.

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் கந்தூரி கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகளும் பேச தொடங்கினர். இதன் காரணமாக 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

thirupparangundram bjp h raja

144 அமலில் இருந்த போது, திருப்பரங்குன்றம் மலைக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே நீதிமன்ற அனுமதியுடன் இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மதுரையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசுகையில், திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

அயோத்தி போல முதல் யுத்தம் முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் தலிபான் அரசை முடிவுக்கு கொண்டு வருவோம். அதற்கான முகூர்த்தம் குறிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார். எச்.ராஜாவின் பேச்சு அங்கு கூடி இருந்தவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எச்.ராஜாவின் பேச்சிற்கு அமைச்சர் சேகர்பாபு கடுமையான கண்டனம் தெரிவித்தார். மதுரையில் கூடிய கூட்டத்தை இந்து அமைப்புகள் என்று கூறக் கூடாது. அவர்கள் அனைவரும் பாஜகவினர் தான். எச்.ராஜாவுக்கு மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஒரு மதத்திற்கும், இனத்திற்கும் எதிராக தான் கோஷம் எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவில் பொறுப்பில் இருப்பவர்களே மதத்தால், இனத்தால் மக்களை வேறுபடுத்தி கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார். இந்த நிலையில் மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+