மதுரை வழியாக செல்லும் தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்.. பாதை மாறும் ரயில்கள் விவரம்
மதுரை: மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை-நாகர்கோவில் ரயில் (வ.எண்.16322) நாளை முதல் வருகிற 31-ந் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை, 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சி செல்லும்.
மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின் படி, செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் (வ.எண்.16848) நாளை (புதன்கிழமை) வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை, 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை, 30-ந் தேதி ஆகிய நாட்களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்கிறது. இதற்காக இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.

மறுமார்க்கத்தில் மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் (வ.எண்.16847) நாளை (புதன்கிழமை), வருகிற 20-ந் தேதி, 23, 27 மற்றும் 30-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்தடையும். இந்த ரயில் புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கன்னியாகுமரி-சரளப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண். 07229) வருகிற 18-ந் தேதி மற்றும் 25-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்கிறது. இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கன்னியாகுமரி-ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12666) வருகிற 19-ந் தேதி மற்றும் 26-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மாதா வைஷ்ணவதேவி கத்ரா-நெல்லை வாராந்திர ரயில் (வ.எண்.16788) வருகிற 17-ந் தேதி மற்றும் 24-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்தடையும். இந்த ரயில் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை மற்றும் மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கோவை-நாகர்கோவில் ரயில் (வ.எண்.16322) நாளை முதல் வருகிற 31-ந் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-கோவை ரயில் (வ.எண்.16321) வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக கோவை செல்லும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருச்சி-ராமேசுவரம் ரயில் (வ.எண்.16849) நாளை முதல் 18-ந் தேதி வரை, 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை, 25-ந் தேதி, 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மானாமதுரையுடன் நிறுத்தப்படும்.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வ.எண்.16850) நாளை முதல் 18-ந் தேதி வரை, 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை, 25-ந் தேதி, 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ராமேசுவரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும்.
குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை, 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16352) வருகிற 20-ந் தேதி, 24-ந் தேதி மற்றும் 27-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மாற்றுப்பாதை வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில்-கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16354) வருகிற 26-ந் தேதி விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்லும்.
மதுரை-கச்சிக்குடா வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண்.07192) நாளை (புதன்கிழமை) மற்றும் 30-ந் தேதி ஆகிய நாட்களில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு பதிலாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.
ராமேசுவரம்-சரளப்பள்ளி சிறப்பு ரயில் (வ.எண். 07696) வருகிற 18-ந் தேதி மற்றும் 25-ந் தேதிகளில் ராமேசுவரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக சுமார் 10 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு புறப்படும்.
மதுரை- பிகானீர் அனுராவத் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22631) வருகிற 24-ந் தேதி மதுரையில் இருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 2 மணிக்கு புறப்படும்.
மதுரை-கச்சிகுடா வாராந்திர ரயில் (வ.எண்.22716) வருகிற 27-ந் தேதி மதியம் 1.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு புறப்படும்.












Click it and Unblock the Notifications