நீதிமன்றத்தை எச்.ராஜா விமர்சித்த வழக்கு.. 2 மாதங்களில் குற்றப் பத்திரிக்கை.. ஹைகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதங்களில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
2018ம் ஆண்டு, செப்டம்பரில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகா் சதூர்த்தி ஊா்வலத்துக்கு மேடை அமைக்க போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதுதொடா்பாக போலீஸாரிடம் பாஜக தேசிய செயலா் எச்.ராஜா கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நீதிமன்ற உத்தரவுபடி செயல்படுவதாக போலீசார் தெரிவித்தபோது, நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியதாக எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அப்போது ஒரு வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீதிமன்றத்தை விமா்சித்தது தொடா்பாக எச்.ராஜா மீது சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தது. உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான எச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், தந்தை பெரியாா் திராவிடா் கழக துணைத் தலைவரும், வழக்கறிஞருமான துரைசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், எச்.ராஜாவைப் போல நீதிமன்றத்தை வேறு யாரேனும் விமா்சித்திருந்தால் அந்த நபரைப் போலீசார் குண்டா் சட்டத்தில் கைது செய்திருப்பார்கள். ஆனால், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கட்சியின், தேசிய செயலாளர் என்பதால் எச்.ராஜா மீதான வழக்கை விசாரிக்கப் போலீசார் தயங்குகின்றனா் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. எனவே, 2 மாதங்கள் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், வழக்கு விசாரணையின் பெரும்பகுதி முடிந்து விட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இவ்வழக்கில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதில் காலதாமதம் ஆகிறது என்றார்.
இதையடுத்து, எச்.ராஜா மீதான வழக்கு விசாரணையை முடித்து 2 மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய திருமயம் காவல் ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications