தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்த அரசு நினைத்தால் ஒரு நாள் போதுமே! உயர்நீதிமன்றம் மதுரை கிளை
மதுரை: தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்த அரசு நினைத்தால் ஒரு நாள் போதுமே என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பொருநை ஆறு என அழைக்கப்படுவது தாமிரபரணி. இது வெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. இந்த ஆறு நெல்லை- தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

விவசாயிகளின் துயரையும் துடைக்கிறது. ராமாயணத்தில் தாமிரபரணி ஆறு குறித்து குறிப்புகள் உள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆற்றில் குப்பைகளும் கழிவுகளும் இருக்கின்றன. இதனால் ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் அச்சமடைகிறார்கள்.
அத்துடன் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மிக அதிக கனமழையால் வெள்ளம் ஊருக்குள் வந்துவிட்டது. இதனால் தென் சென்னையே வழக்கத்திற்கு மாறாக நீரில் தத்தளித்தது. இது போன்ற சம்பவத்திற்கு நீர் நிலைகள் முறையாக தூர்வாரப்படாதது காரணம் என சிலர் விமர்சித்தனர்.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என நெல்லையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் இன்று விசாரணை நடத்தினர்.
அப்போது நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டுவோர் மீது ஏன் அபராதம் விதிக்கக் கூடாது? தாமிரபரணி ஆற்றை அரசு நினைத்தால் சுத்தப்படுத்த ஒரு நாள் போதும். ஆற்றை சுத்தப்படுத்துவது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications