சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு.. காவலர் ரேவதிக்கு பாதுகாப்பும், ஊதியமும் வழங்க மதுரை கிளை உத்தரவு
மதுரை: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்களுக்கு மத்தியில் சாட்சி அளித்த காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பையும் வேலைக்கான சம்பளத்தையும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த சித்ரவதை கொலை வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. நேற்று முதல் விசாரணையை தொடங்கியது.
இருவரும் அடித்து கொல்லப்பட்டதாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அறிக்கையை தொடர்ந்து செல்போன் கடை, சாத்தான்குளம் போலீஸ் நிலையம், கோவில்பட்டி மருத்துவமனை, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் என பல தரப்பில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
இதையடுத்து நேற்று எஸ்ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை எஸ்ஐ பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரகுகணேஷ் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஹேமாவின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சாத்தான்குளம் கொலை வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் சம்பவம் குறித்து நேரில் சாட்சியம் அளித்த காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பும், வேலைக்கான ஊதியத்தையும் வழங்கக் கோரியும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் எந்த நேரத்திலும் அவருக்கு உயரதிகாரிகளால் ஆபத்து நேரிடலாம் என்றும் அவரது கணவர் தொலைகாட்சிகளுக்கு பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை, தடயங்கள் அழித்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications