மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம்.. முதல்வரால் திறக்கப்படும் 190 கோடி பிரம்மாண்டம்.. எப்போது தெரியுமா?
மதுரை: மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் ரூ.190 கோடி மதிப்பில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமுக்கம் சந்திப்பில் இருந்து அண்ணாசிலை சந்திப்பு வரை இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தமுக்கம் முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை மேல்தள பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வைகை ஆற்றுப்பால பணிகள் முடிவடைந்துள்ளன. மொத்த மேம்பால பணிகள் அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது. எப்போது பாலம் திறக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் பிரதான பகுதி என்றால் அது கோரிப்பாளையம் தான்.இங்கு எப்போதுமே நெரிசல் அதிகமாக இருக்கும். வைகை ஆற்றின் இருபுறமும் உள்ள மக்கள் (குறிப்பாக அண்ணா நகர், கே.கே.நகர் மற்றும் பெரியார் பேருந்து நிலையப் பகுதிகள்) ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் செல்ல ஏவி மேம்பாலம் மற்றும் புதுப்பாலத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த அனைத்து வாகனங்களும் கோரிப்பாளையம் சந்திப்பில் வந்து குவிகின்றன.

கோரிப்பாளையம் பாலம் அவசியம் ஏன்
அதேபோல் தென் தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனை இங்குதான் உள்ளது. அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கி உயிர்ப்பலிகள் ஏற்படும் சூழல் அடிக்கடி உருவாவதால், தடையற்ற போக்குவரத்து அவசியம் ஆகும். மதுரை மருத்துவக் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் என 24 மணிநேரமும் வாகன நடமாட்டம் அதிகம்.
பகனல் ரோடு சந்திப்பு
அதேபோல் அண்ணா பேருந்து நிலையப் பக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் சந்திப்பை அடைய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது. அதேபோல பனகல் ரோடு மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வாகனங்கள் இணையும் பகுதி என்பதால் இங்குதான் ஆம்புலன்ஸ்கள் அதிகம் சிக்கி தவிக்கின்றன. மேலும் அழகர்கோவில் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் கோரிப்பாளையம் சிக்னலுக்காக மிக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது.
வைகை ஆற்றில் நுழைவு வாயில்
அதேபோல் வைகை ஆற்றின் பாலங்களைக் கடந்து நகருக்குள் நுழையும் இடங்கள் எப்போதும் ஸ்தம்பித்துக் காணப்படும். எனவே தான் அரசு மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் ரூ.190 கோடி மதிப்பில், மேம்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கியது. இந்த பாலம் தமுக்கம் சந்திப்பில் இருந்து அண்ணாசிலை சந்திப்பு வரை இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தமுக்கம் முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை மேல்தள பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வைகை ஆற்றுப்பால பணிகள் முடிவடைந்துள்ளன.
அமைச்சர் எவ வேலு ஆய்வு
கோரிப்பாளையத்தில் நடைபெற்று வரும் புதிய பாலம் கட்டுமான பணிகளை, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மூர்த்தி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவருடன் கலெக்டர் பிரவீன் குமார், எம்.எல்.ஏ.க்கள். தளபதி, பூமிநாதன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சென்றனர். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பணிகளை விரைவாக முடிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பிப்ரவரியில் முடியும்
கோரிப்பாளையம் மேம்பால பணிகள், பிப்ரவரி 10-ந்தேதிக்குள் முழுமையாக முடிவடையும். அதன் பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின், பாலத்தை திறந்து வைப்பார். இந்த மேம்பாலத்திற்கு சிறப்பான பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. இந்த பகுதி மக்கள் என்ன எண்ணுகிறார்களோ அந்த பெயரை முதல்வர் வைப்பார்.
விரகனூர் சுற்றுச்சாலை
மதுரை மாநகரில் வைகை ஆற்றின் இருகரைகளிலும் காமராஜர் பாலம் முதல் விரகனூர் சுற்றுச்சாலை வரை 8 கிலோ மீட்டர் நீளத்தில் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் முன்னெடுப்பின்படி விபத்தை குறைப்பதற்காக 100 இடங்களை கண்டறியப்பட்டு விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுங்கச்சாவடி சாலைகள் ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தத்தின் அடிப்படையில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இல்லையென்றால் அரசு சார்பாகவும் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications