”வராரு.. வராரு.. அழகர் வராரு” பக்தர்கள் புடைசூழ மதுரை வந்தார் கள்ளழகர்.. பக்தர்கள் உற்சாகம்
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் 4 வது நாளான இன்று கள்ளழகர் மதுரை வந்தடையும் நிகழ்வு நடைபெற்றது. தங்க பல்லக்கில் பக்தர்கள் புடைசூழ மதுரை வந்தடைந்தார் கள்ளழகர். சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி வைத்து கள்ளழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கள்ளழகர் போல் வேடமிட்ட பக்தர்கள் அழகர் மீது நீரை பீய்ச்சி அடித்து உற்சாகமடைந்தனர்.
மதுரை அழகர் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அழகரை பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர். சித்திரைத் திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று, கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் நிகழ்வு நடைபெற்றது.

நேறு மாலை 6.15 மணிக்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக கள்ளழகர் தங்கப் பல்லக்கில் எழுந்தருளினார். இந்த திருவிழாவானது வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 8 ஆம் தேதி விழா தொடங்கிய முதல் நாளில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியான் பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து 2வது நாளில் தோளுக்கினியான் பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து நேற்று மாலை, கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் பெருமாள் திருக்கோலத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து இரவு பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபம் என வழியெல்லாம் எழுந்தருளினார். இன்று அதிகாலை 1 மணியளவில் சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபம், 2.30 மணிக்கு கடச்சனேந்தல், 5.30 மணிக்கு மாநகர் எல்லைகளில் எதிர்சேவைகள் நடைபெற்றது.
இன்று காலையில் கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். தங்க பல்லக்கில் பக்தர்கள் புடைசூழ மதுரை வந்தடைந்தார் கள்ளழகர். சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி வைத்து கள்ளழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கள்ளழகர் போல் வேடமிட்ட பக்தர்கள் அழகர் மீது நீரை பீய்ச்சி அடித்து உற்சாகமடைந்தனர்.












Click it and Unblock the Notifications