Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பித்த பதற்றம்.. மதுரைக்கு எடப்பாடி பழனிச்சாமி வரக்கூடாது.. தேவரினத்திற்கு துரோகம் என போஸ்டர்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மதுரையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

முக்குலத்தோர் தேசியக் கழகம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ''தேவரினத்திற்கு துரோகம்.. வராதே வராதே தூங்கா நகருக்கு வராதே'' என எடப்பாடி பழனிசாமியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் மற்றொரு அமைப்பு சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் எட்டு தோல்வி எடப்பாடி பழனிசாமி என விமர்சிக்கப்பட்டுள்ளன.

Controversial posters against Edappadi Palaniswami have been put up in Madurai while the AIADMK conference

அதிமுக மாநாடுக்கு இன்னும் முழுமையாக 3 நாட்கள் கூட இல்லாத நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனிடையே எதிர்ப்பாளர்களை சரிகட்டும் வேலைகளை ஆர்.பி.உதயகுமார் கையில் எடுத்துள்ளார்.

மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி மதுரை வருகை தரும் போது எந்தவித சலசலப்பும் ஏற்படக் கூடாது என்பது ஆர்.பி.உதயகுமாருக்கும், செல்லூர் ராஜூவுக்கும் கொடுக்கப்பட்டுள்ள இன்ஸ்டரக்‌ஷன் ஆகும். இதனால் அவர்கள் இருவரும் சர்ச்சைக்குரிய போஸ்டர்களை அகற்றும் பணிகளையும் கூடுதலாக கவனித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்ல மதுரை அதிமுக மாநாடுக்கு கூடுதல் பாதுகாப்பு தரவும் காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பக்கம் எதிர்ப்புகள் கிளம்பினாலும் கூட மாநாடு நடைபெறும் மதுரை புறநகர் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+