Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் தேசியக் கீதம் பாடப்படும் என அறிவித்துவிட்டு அதைப்பாடாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால், தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்தி விட்டு தேசியக்கீதம் பாடினர். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக பாடப்பட்டது.

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கூறும் கருத்துக்கள் அவ்வப்போது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசுடன் மோதல் போக்கை கையாண்டு வருவதுடன் ஆளும் திமுக அரசின் கொள்கைகளையும் மறைமுகமாக ஆளுநர் ஆர்என் ரவி அவ்வப்போது பேசுவதும் அதற்கு ஆளும் திமுகவும் பதிலடி கொடுப்பதும் என அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.

controversy-over-tamil-thai-vazthu-padal-being-stopped-at-governor-ravis-event-in-madurai

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி டிடி தமிழ் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் "தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகளை விட்டுவிட்டு பாடினார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரை திருப்தி படுத்துவதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு 'திராவிட நல் திருநாடு' என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியதாக விமர்சனம் எழுந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆளுநருக்கு தமிழ்த்தாய் பாடல் விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறிய டிடி தமிழ் தொலைக்காட்சி, இது தொடர்பாக மன்னிப்பு கோரியது.

இதையடுத்து இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், நேற்று ஆளுநர் ரவி நேற்று பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டு பின்னர் தேசிய கீதம் பாடிய பிறகு முழுமையாக பாடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியா சார்பில், இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். ஆளுநர் ரவி பேசும் முன்பாக அதாவது, நிகழ்ச்சி தொடங்கும் போது, முதலில் தேசிய கீதம், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

ஆனால் இதை சரியாக கவனிக்காத மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். இதைக்கவனித்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், 'தேசிய கீதம்... தேசிய கீதம்...' என சத்தம் எழுப்பினர். உடனே சுதாரித்த மாணவிகள், தமிழ்த்தாய் பாடுவதை நிறுத்திவிட்டு, தேசிய கீதம் பாடினர். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் முறையாக பாடப்பட்டது. ஆளுநர் ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+