Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு தமிழர் கூட இல்லையே.. சு.வெங்கடேசன் எம்.பி. கேட்டதுமே.. உடனே தேர்வை நிறுத்தி வைத்த மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

மதுரை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் முதல்வர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட 784 பேரில் ஒரு தமிழர் கூட இல்லை என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் குரல் எழுப்பியிருந்த நிலையில் தற்போது இந்த நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1,252 கேந்திரய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பள்ளியில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளுக்கு அதிக முக்கியத்துவமும் அதனை கடந்து பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவமும் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று பிரச்னை எழுந்தது.

CPM MP S.Venkatesan raised questions about Kendriya Vidyalaya School Principals exam, which has been put on hold

இப்படி இருக்கையில் தற்போது மற்றொரு பிரச்னையும் எழுந்தது. அதாவது கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் பொறுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெற்றன. இதில் விண்ணப்பித்தவர்களுக்கு நேரடி நியமன முறையில் தேர்வு நடைபெறும். இந்த நேர்காணலுக்கு 784 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதில் ஒரேயொரு தமிழர் கூட அழைக்கப்படவில்லை. இது குறித்து மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதாவது, "கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்ட முறையே 784 & 173 பேர்களில் ஒரு தமிழர் கூட இல்லை. இது அநீதி. அதிர்ச்சி தருவது. நியமன முறையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு ஆளாகியுள்ளது. தேர்வுப் பட்டியலில் தென்படும் இன்னொரு பிரச்சினை. "மெரிட்" எனும் வகையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் எவ்வளவு பேர் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி என்ற விவரங்கள் இல்லை.

"மெரிட்" டில் வரக் கூடிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் சரிக் கட்டக் கூடாது என்ற நெறிகள் மீறப்பட்டுள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. பெயர்களை வைத்து சமூக அடையாளம் அறியும் சூழ்நிலை இந்திய சமுகத்தில் உள்ளது துரதிருஷ்டம். ஆனாலும் இங்கு அதுவே பாரபட்சத்தை வெளிக் கொண்டும் வருகிறது. முதல்வர் பதவிக்கு நேர்காணல் அழைக்கப்பட்ட பழங்குடியினர் 58 பேரில் 28 "மீனா"க்கள் உள்ளனர். ஆனால் 327 பொதுப் பட்டியல் (UR) தேர்வர்களில் ஒரு "மீனா" கூட இல்லை.

CPM MP S.Venkatesan raised questions about Kendriya Vidyalaya School Principals exam, which has been put on hold

இது அப்பட்டமாக தெரிகிற ஒரு உதாரணமே. வெளிப்படையான பட்டியல் ஆக இது இல்லை. எத்தனை ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி தேர்வர்கள் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதை கேந்திரிய வித்யாலயா சங்காதன் தெரிவிக்க வேண்டும். ஆகவே கேந்திரிய வித்யாலயா இந்த நியமனங்களை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு பின்னரே இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும். தமிழர்களுக்கும், ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும் அநீதி இழைக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதமும் எழுதியிருந்தார். இந்நிலையில் ஜோத்பூர் தீர்ப்பாயம் தலையீட்டில் (CAT) நேர்காணல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+