உலகப்கோப்பை கிரிக்கெட்.. தொடரட்டும் இந்தியாவின் வெற்றி.. மதுரையில் சிறப்பு பூஜைகள்
மதுரை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் வெல்லவும் இறுதிப் போட்டியில் வென்று இந்தியா கோப்பையை வெல்லவும் மதுரையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து காஞ்சி ஸ்ரீமகாபெரியவா கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நடந்து வரும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று உலகக் கோப்பையைக் கைப்பற்ற மதுரையில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் 2023, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இன்று நடைபெறும் அரை இறுதி போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவும், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.
இதற்கு அடுத்த போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இவ்விரு போட்டிகளிலும் வெல்லும் அணிகள் பைனலில் மோதும்.

இதுவரையிலும் பங்கேற்ற 9 லீக் போட்டிகளிலும் வென்று புதிய சாதனை படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த வெற்றி தொடர வேண்டும் என்பதை பிரதான பிரார்த்தனையாக வைத்து, மதுரை காஞ்சி மகா பெரியவா கிருஹத்தில் இந்த விசேஷ பூஜை நடத்தப்பட்டது. நேற்று மகா பெரியவரின் அனுஷ நட்சத்திர நாள் என்பதால், மகா பெரியவரின் விக்ரகம் மற்றும் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரனை நடைபெற்றது.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து எஸ்.எஸ்., காலனியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீமகாபெரியவா கோவிலில் சிறப்பு பூஜைகளை செய்தனர். முன்னதாக மஹன்யாஸம், ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, கோப்பையை வெல்ல வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அப்போது, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலக கோப்பை போட்டோ இடம் பெற்ற பெரிய பதாகையை வைத்து அர்ச்சனை செய்து தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட அட்டைகள் தனித்தனியே கொடுக்கப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.
INDIAN people are praying for the victory of team India in the semi finals
— vj...🧊🔥 (@MadiraVijay) November 15, 2023
Madurai, tamil nadu.#AishwaryaRai #RainAlert #HeavyRain #Tiger3Review#ChildrensDay #AbdulRazzaq #INDvsNZ #KaneWilliamson
#BrandedFeaturespic.twitter.com/rQgOZpANzl
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் மற்றும் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் நெல்லை பாலு, சங்க செயலாளர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன், பொருளாளர் கதிரவன், பட்டய உறுப்பினர்கள் சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ கருப்பையா, அத்வி மீடியா ஆதவன், மருத்துவர் புகழேந்தி, சுப்பிரமணியன், ராஜ்குமார் உட்பட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications