திமுக ஆசையை அதிமுக நிறைவேற்றும்.. கட்சிக்குள் யாரை சேர்ப்பது? எடப்பாடி தான் எல்லாமே.. தங்கமணி பளீஸ்
மதுரை: அதிமுகவில் யாரையும் சேர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை, தேர்தல் நேரத்தில் யாரை சேர்ப்பது என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சி குடிநீர் திட்டத்தை முடக்குவதாகவும் சாலைகளை சீரமைக்கவும், பாதாள சாக்கடை திட்டத்தை தாமதப்படுத்துவதாகவும், கனிம வளம் கடத்தப்படுவதாகவும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பாக திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள், 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய முன்னாள் அமைச்சர் தங்கமணி,” நகை கடன் தள்ளுபடி என கூறினார்கள் ஆனால் 35 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்குதான் தள்ளுபடி செய்யப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்த மாட்டோம் எனக் கூறினார்கள். 52% மின்கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். இந்த அரசின் இரண்டு சாதனைகள் இன்று கள்ளச்சாராயம்.
அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகளில் ஒருவர் கூட இறக்கவில்லை. திமுக ஆட்சியில் முதலில் நடைபெற்ற கள்ளச்சாராயம் போது 10லட்சம் கொடுத்துவிட்டு இனிமேல் தமிழகத்தில் ஒரு கள்ளச்சாராய சாவு கூட நடக்காது என்று கூறினார். ஒரு ஆண்டு கழித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் நிலையம் அருகே நீதிமன்றத்திற்கு பின்பு 67 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்து விட்டார்கள்.
மற்றொரு சாதனை தமிழகமே போதை பொருளால் மிதந்து கொண்டிருக்கிறது. காவல்துறையால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால்தான் ஒரு 15 வயது மாணவன் கூட போதைக்கு அடிமையாகி காவலரை தாக்கக்கூடிய காட்சிகளை நாம் பார்க்கின்றோம். 1980 இல் பாராளுமன்ற தேர்தலின் போது இரண்டு தொகுதியில் தான் வெற்றி பெற்றோம். கலைஞர் இந்திரா காந்தியிடம் சொல்லி ஆட்சியை கலைத்தார்.
அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தல் என்பது ஒவ்வொரு தொகுதியாக சென்று செய்தேன் என்று புரட்சித்தலைவர் மக்களிடம் பேசினார். அந்த தேர்தலின் முடிவில் அதற்கு முந்தைய தேர்தலை விட அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றோம் அதே போல வருகின்ற தேர்தலிலும் நடக்கும்” எனக் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி கூறுகையில்,” 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதல்வர் கூறுகிறார். அதை முதல்வரின் ஆசை ஆனால் அதை நிறைவேற்ற போவது அதிமுக தான். கட்சிப் பிரிந்துள்ள நிலையில் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்கிறீர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆறு சதவீத வாக்குகள் குறைந்து இருக்கிறது.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் இன்னும் ஆறு சதவீதம் குறையும் அந்த 12 சதவீதம் எங்களுக்கு வரும். கட்சியில் யாரையும் சேர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை தேர்தல் நேரத்தில் யாரை சேர்ப்பது என்று பொதுச் செயலாளர் முடிவெடுப்பார். மக்களின் முக மலர்ச்சியை இந்த ஆட்சிக்கு சாட்சி என முதல்வர் கூறியுள்ளார். பின் எதற்காக ஆறு சதவீத வாக்கு குறைந்தது. எடப்பாடியாரின் அரசுதான் மக்களுக்கான அரசு” என தனது பேட்டியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.
-
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications