Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் + தேனி + குமுளி.. அட்டகாச அறிவிப்பு.. எகிறி குதிக்கும் மதுரை.. "4 இல்லை, 6 வருது".. மாஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திண்டுக்கல் - தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இதையடுத்து, மதுரையில் இருந்து போடிக்கு விரைந்து பயணம் மேற்கொள்ள முடியும் என்பதுடன், தென் மாவட்டத்துக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரமாக இது கருதப்படுப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலையின் பணிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் விரிவுபடுத்தப்பட்டே வருகிறது. சமீபத்தில்கூட, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்...

Dindigul Theni Highway is being converted into Six Line Road, by National Highways Department

பசுமைவழிச்சாலை: அதன்படி, போடி ரூட்டில் 4 வழிச்சாலை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதன்படி, பசுமை வழி சாலையானது, 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறையும் அறிவித்திருந்தது.

இதையடுத்து, 700 கோடி செலவில் தேனி மாவட்டம் போடி முதல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வரையிலான 64 கி.மீட்டருக்கு நெடுஞ்சாலையை மேம்படுத்த போவதாகவும். இதற்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..
மதுரை - போடி இடையே ரயில் சேவையை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பானது கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது.

6 வழிச்சாலை: இந்நிலையில், இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. திண்டுக்கல் - தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையை, 6 வழியாக விரிவாக்கம் செய்வதற்கானநடவடிக்கைகளை, தேசியநெடுஞ்சாலைகள் ஆணையம் துவங்கியுள்ளதாம்.. திண்டுக்கல் - தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலை, தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. தற்சமயம் 2 வழிச்சாலையாக பராமரிக்கப்படும் இந்த சாலையானது, மொத்தம் 138 கி.மீ நீளம் கொண்டது..

எனினும், இந்த சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும், சபரிமலை சீசனில் வாகனங்கள் அதிகளவில் பயணிப்பதால், டிராபிக் ஜாம் ஏற்படுவதுடன், விபத்துக்களும் நடந்துவிடுகின்றன. அதனால்தான், இந்த சாலையை 4 அல்லது 6 வழியாகவே விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவெடுத்துள்ளதாம்..

டபுன்ள குஷி: இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சொல்லும்போது, இன்னும் 3 மாதங்களில் திட்ட அறிக்கை கிடைத்ததுமே, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் அவை சமர்ப்பிக்கப்பட உள்ளது.. அதற்கு பிறகு, இந்த சாலை விரிவாக்கத்திற்கு எவ்வளவு நிதி நிலங்கள் தேவைப்படும் என்ற விபரங்கள் தெரியவரும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+