மர்மம் உடைகிறது.. ராஜ ராஜ சோழன் நினைவிடத்தில் நவீன தொழில்நுட்ப ஆய்வு.. 25ம் தேதி அறிக்கை: ஹைகோர்ட்
மதுரை: சோழ குலத்தின் புகழ் பெற்ற மன்னரான, ராஜ ராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று, தர தொல்லியல் துறைக்கு ஹைகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கறிஞர் திருமுருகன் தனது மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக பரப்பில் புகழ் பெற்ற மன்னனாக இருந்தவர் சோழர் குலத்தை சேர்ந்த ராஜராஜ சோழன். அருள்மொழித்தேவன் என்ற இயற்பெயரை பெற்றிருந்தார். தஞ்சை பெரிய கோயிலை கட்டி ஆன்மீக தொண்டாற்றினார்.
ராஜராஜசோழன் மறைந்த பிறகு, அவரது உடல், கும்பகோணம் அருகேயுள்ள, உடையாளூர் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. எனவே அங்கு, ராஜராஜசோழனுக்கு தமிழக அரசு மணி மண்டபம் கட்ட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். வங்கக்கடல் ஓரத்தில் ராஜராஜ சோழனுக்கு சிலை நிறுவ வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதுகுறித்து தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் குறிப்பிட்ட இடத்தில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், நவீன தொழில்நுட்பத்தை கொண்டு உடையாளூர் பகுதியில் தொல்லியல் துறை சோதனை நடத்தி, அதுகுறித்த அறிக்கையை ஏப்ரல் 25ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவால், ராஜராஜ சோழன் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழும் வாய்ப்பு உள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications