மர்மம் உடைகிறது.. ராஜ ராஜ சோழன் நினைவிடத்தில் நவீன தொழில்நுட்ப ஆய்வு.. 25ம் தேதி அறிக்கை: ஹைகோர்ட்
மதுரை: சோழ குலத்தின் புகழ் பெற்ற மன்னரான, ராஜ ராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று, தர தொல்லியல் துறைக்கு ஹைகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கறிஞர் திருமுருகன் தனது மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக பரப்பில் புகழ் பெற்ற மன்னனாக இருந்தவர் சோழர் குலத்தை சேர்ந்த ராஜராஜ சோழன். அருள்மொழித்தேவன் என்ற இயற்பெயரை பெற்றிருந்தார். தஞ்சை பெரிய கோயிலை கட்டி ஆன்மீக தொண்டாற்றினார்.
ராஜராஜசோழன் மறைந்த பிறகு, அவரது உடல், கும்பகோணம் அருகேயுள்ள, உடையாளூர் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. எனவே அங்கு, ராஜராஜசோழனுக்கு தமிழக அரசு மணி மண்டபம் கட்ட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். வங்கக்கடல் ஓரத்தில் ராஜராஜ சோழனுக்கு சிலை நிறுவ வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதுகுறித்து தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் குறிப்பிட்ட இடத்தில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், நவீன தொழில்நுட்பத்தை கொண்டு உடையாளூர் பகுதியில் தொல்லியல் துறை சோதனை நடத்தி, அதுகுறித்த அறிக்கையை ஏப்ரல் 25ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவால், ராஜராஜ சோழன் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழும் வாய்ப்பு உள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications