Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் மிதந்த மேட்டரில் ட்விஸ்ட்.. வட்டாட்சியர் அலுவலக ஊழியர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை: சில நாட்களுக்கு முன்பு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்தன. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் திருப்​புவனம் வட்டாட்​சி​யர் அலு​வலக நில அளவைப் பிரி​வில் பணிபுரி​யும் முது​நிலை வரைவாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 10,000 இடங்களில் முகாம்கள் நடைபெற்று சுமார் 45 சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Draftsman Arrested In the case that Ungaludan Stalin Camp Petitions Floated in Vaigai River

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மகளிர் உரிமைத் தொகை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஆவணங்களில் பெயர் திருத்தம், பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றுக்கான மனுக்களை மக்கள் அளித்து வருகின்றனர். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய பயனாளிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். எனவே பொதுமக்கள் முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மக்கள் வழங்கும் மனுக்கள் மீது அதிகபட்சம் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், இதுவரை நடந்த முகாம்கள் மூலம், லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து வந்ததாக தகவல் வெளியானது.

வைகை அணையில் மிதந்த மனுக்கள்

முகாம்களில் வழங்கப்பட்ட மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு அலுவலர்களிடம் வழங்கப்பட்ட நிலையில் அந்த மனுக்கள் ஆற்றில் மிதந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார் அதனை ஆற்றில் வீசியவர்கள் யார் என விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

சிவகங்கை அருகே கீழடி, கொந்தகை, நெல் முடிகரை, மடப்புரம் பகுதிகளில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்து வந்ததாகவும், ஆற்றில் மிதக்கும் மனுக்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தனர்.

தீவிர விசாரணை

இந்த விவகாரம் குறித்து சிவகங்கை கோட்​டாட்​சி​யர் விஜயகு​மார் விசா​ரணை நடத்​தி​னார். அதன் அடிப்​படை​யில், திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் விஜயகு​மார் இடமாற்​றம் செய்​யப்​பட்​டார். மேலும், அலட்​சி​ய​மாகப் பணிபுரிந்த 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது. முன்னதாக, திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் நில அளவைப் பிரி​வில் பராமரிக்கப்பட்டு வந்த 13 பட்டா மாறு​தல் தொடர்​பான மனுக்​களை மர்ம நபர்​கள் திருடிச் சென்​ற​தாக, வட்​டாட்​சி​யர் விஜயகு​மார் புகார் அளித்திருந்தார்.

அதன்​பேரில், திருப்​புவனம் போலீ​சார் வழக்​குப்பதிவு செய்​தனர். வட்​டாட்சியர் அலு​வல​கத்​தில் சிசிடிவி கேம​ராக்​கள் இல்​லாத​தால், மனுக்​களை திருடிய நபரைக் கண்​டறிவ​தில் தாமதம் ஏற்​பட்​டது. இதற்கிடையே, திருப்​புவனம் வட்டாட்​சி​யர் அலு​வலக நில அளவைப் பிரி​வில் பணிபுரி​யும் முது​நிலை வரைவாளர் சரவணனுக்கு 17 'பி'-ன் கீழ் நடவடிக்கை எடுக்​க​வும், அவுட்சோர்சிங்கில் பணிபுரி​யும் புல உதவி​யாளர் அழகுப்​பாண்​டியை பணி நீக்கம் செய்​ய​வும், நில அளவைத் துறை உதவி இயக்​குநருக்கு மாவட்ட ஆட்​சி​யர் அறி​வுறுத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது.

உதவி வரைவாளர் கைது

இதற்​கு, தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றி​யம், நில அளவை அலு​வலர்​கள் ஒன்றிப்பு சங்கத்​தினர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் நில அளவைப் பிரி​வில் பணிபுரி​யும் உதவி வரை​வாளர் முத்​துக்​குமரனை (42) போலீ​சார் விசா​ரித்​தனர். நில அளவை அலு​வலர்​கள் ஒன்​றிப்பு சங்​கத்​தினர், முறை​யான ஆதா​ரம் இல்லாமல் கைது செய்​யக் கூடாது என எதிர்ப்பு தெரி​வித்​தனர். வைகை ஆற்​றுப் பாலத்​தில் முத்​துக்​குமரன் சென்று வந்​தது அங்​குள்ள சிசிடிவி காட்​சிகளில் பதி​வான​தாக போலீசார் தெரி​வித்​தனர்.

ஆனால், முத்துக்குமரன் மனுக்​கள் கொண்டு வந்​ததற்​கோ, ஆற்​றில் வீசியதற்கோ ஆதா​ரம் இருந்​தால் மட்​டுமே கைது செய்ய வேண்​டுமென சங்கத்​தினர் வலி​யுறுத்​தினர். இதையடுத்​து, மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் சிவபிர​சாத், கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் பிரான்​சிஸ், டிஎஸ்பி பார்த்​திபன், ஆய்​வாளர் முத்​துக்​கு​மார் ஆகியோர் நேற்று முழு​வதும் விசா​ரணை நடத்​தினர். பின்​னர், வைகை ஆற்​றுப் பாலத்​துக்​குச் சென்று வந்​ததற்கு முத்துக்குமரன் முறையாக காரணம் கூற​வில்லை என்று கூறி அவரை நேற்​று இரவு கைது செய்​துள்ளனர்​.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+