மாப்ளை ஆத்துல வெள்ளம்டா.. கிளம்பி வாங்கடா.. இரு கரை தொட்டு ஓடும் வைகை.. மதுரையில் உற்சாகம்!
வைகை கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை: 8 வருஷம் ஆச்சு இப்படி பார்த்து... என்று வைகை ஆற்றில் சீறிப் பாய்ந்து ஓடும் வெள்ளத்தை மக்கள் ரசித்து ரசித்து பார்த்து வருகிறார்கள்.
தமிழக ஆறுகளிலேயே ரொம்ப வித்தியாசமானது இந்த வைகை. எப்போது வெள்ளம் வரும் என்றே தெரியாது. மாநிலமெங்கும் ஆறுகள் நிறைந்து வழிந்தோடினாலும் வைகை அது பாட்டுக்கு அமைதியாக இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான ஆறு வைகை. அது கரை புரண்டு ஓடினால் மதுரைக்கு அதுதான் திருவிழா!
இந்த நிலையில், தற்போது வைகை ஆற்றில் நீர் இரு கரை தொட்டி ஓடி வருகிறது மதுரையில். எல்லாத்துக்கும் காரணம் இந்த கஜா புயல்தான். புயல் காரணமாக மதுரையில் வைகை நீர்ப்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்ததால், வைகை அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் வரை திறந்து விடப்பட்டது.

கரைபுரண்டு வெள்ளம்
இது மட்டுமில்லாமல் மஞ்சளாறு மற்றும் வரதமாநதி ஆற்றிலிருந்து கூடுதலாக 9,000 கன அடி தண்ணீரும் வைகையில் வந்து தெறித்து கொட்டியது. அதனால் நேற்றிலிருந்தே வைகையில் நீர் கரைபுரண்டு ஓட தொடங்கிவிட்டது.

8 வருஷம் ஆகிவிட்டது
இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஓடுகிறது. மதுரை மக்கள் குஷியாகி கூட்டம் கூட்டமாக வந்து வைகையை வேடிக்கை பார்த்து வருகின்றனர். காரணம், இப்படி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 8 வருஷத்திற்கும் மேலாகி விட்டதாம், 2010-ல்தான் இப்படி ஒரு வெள்ளத்தை மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதற்கு பிறகு வெள்ளம், மழை என்றெல்லாம் பேசப்பட்டதே தவிர, வைகை ஆற்றை எதுவும் திரும்பி பார்க்கவில்லை.
|
சிம்மக்கல் தரைப்பாலம்
சிம்மக்கல் தரைப்பாலம் மூழ்கி கிடப்பதை கண்டு பூரித்து போய் ஆளாளுக்கு செல்போனை கொண்டு வந்து படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் போலீசார் யாரையுமே கிட்ட போய் பார்க்க அனுமதிக்கவில்லை. முதல்வேலையாக தரைப்பாலத்துக்கு சீல் வைத்துவிட்டார்கள்.
|
கண்காணிப்பு பணிகள்
அந்த வழியாக வரும் வாகனங்களை எல்லாம் தடுத்து நிறுத்திவிட்டனர். மதுரை மக்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று போலீசார் ஆற்றின் இரு கரை பகுதிகளிலும் நின்று கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள்.
|
அமைச்சர் ஆலோசனை
இந்த நிலையில், வைகை ஆற்றில் வெள்ளம் என்பதால் அமைச்சர் செல்லூர் ராஜூ, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். வெள்ளம் காரணமாக மாவட்ட மக்களின் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தடுப்பு வேலிகள்
இதனிடையே மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் நீர்பிடிப்பு பகுதிகளுக்கே வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரு கரைகளிலும் தடுப்பு வேலிகளை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்தார். வெள்ளம் கட்டுக்கடுங்காமல் ஓடுவதால், கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications