வாயால் வடை சுடும் ஸ்டாலின்..கொலைகளால் ஸ்தம்பித்த தமிழகம்! ட்ரான்ஸ்ஃபர் கூடாது.. RB உதயகுமார் அட்டாக்
மதுரை: உயர் அதிகாரிகள் இடமாற்றத்தால் பிரச்சனை தீர்ந்து விடாது எனவும், காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யாமல், சுதந்திரமாக செயல்படவிட்டால் தான் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
SAY NO TO DRUGS - SAY NO TO DMK என்ற தலைப்பில் திமுக ஆட்சி நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் குறித்தும், RESIGN STALIN என்ற தலைப்பில் திமுக ஆட்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயம் குறித்தும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அம்மா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் திருமங்கலம் இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர்," கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் பலியான சம்பவம் நடைபெற்றது. இது திமுக ஆட்சியின் அலட்சிய போக்கே காரணமாகும். ஏற்கனவே மரக்காணத்தில் 22 பேர் பலியான சம்பவத்தில் பாடம் கற்றுக்கொண்டு முதலமைச்சர் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் ஆனால் கோட்டை விட்டுவிட்டார். தற்பொழுது கூட விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள குமாரமங்கலத்தில் கள்ளச்சாராயத்தால் ஒருவர் பலி ரெண்டு பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
கள்ளச்சாராயத்தை இன்னும் ஒழிக்க முடியவில்லை. கள்ளச்சாராயத்தை ஒழித்து விடுவேன் என்று முதலமைச்சர் வாயால் வடை சுடுவது போல் சொல்லாமல், செய்து காட்ட வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்தாண்டு சட்டசபையில் உள்துறை மானிய கோரிக்கையில் இரண்டரை மணி நேரம் எடப்பாடியார் ஆதாரத்துடன் சட்ட ஒழுங்கு சீர்கேடு குறித்துபேசினார். முதலமைச்சர் அன்றைக்கு அக்கறை செலுத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. கஞ்சாவை ஒழிக்க என்று திட்டத்தை அறிவித்தார்கள்.
ஆனால் கட்டுப்படுத்தியதாக தெரியவில்லை. கள்ளச்சாரய சம்பவம் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. சட்ட ஒழுங்கை நிலை நாட்ட தான் காவல்துறை உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை என செய்திகள் வராத நாளே இல்லை. ஆனால் இன்றைக்கு காவல்துறை விஐபி தரவரிசை போல 4000 ரவுடிகளை ஏ,பி,சி, என்று தரம் பிரித்து பட்டியல் வெளியிடுகிறார்கள். உயர் அதிகாரிகள் இடமாற்றத்தால் பிரச்சனை தீர்ந்து விடாது.
காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யாமல் சுதந்திரமாக செயல்படவிட்டால் சட்ட ஒழுங்கு நிலைநாட்ட முடியும். மதுரையில் நகைக்காக மூன்று மூதாட்டிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதுவரை துப்பு துலக்கவில்லை. தமிழகத்தில் கனிமவள கொள்ளை நடைபெற்று இருக்கிறது. இந்த நிமிடம் வரை தமிழகத்தின் முதலமைச்சரோ, அரசோ வாய் திறக்கவில்லை. அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் இதுகுறித்து அபிடவிட் தாக்கல் செய்துள்ளது. ஐந்து மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
நடைபெற்றுள்ளது.
தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கூட தர மறுக்கும் கர்நாடகா முதலமைச்சரை, தமிழக முதலமைச்சர் கண்டிக்காமல் மௌனம் விரதம் இருந்து வருகிறார். இனி மௌனம் விரதம் இருக்காமல். வாயால் வடை சுடாமல் முதலமைச்சர் வாய் திறக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேர்தல் நியாயமாக நடைபெறாது என்று தீர்க்கதரிசனமாக எடப்பாடி பழனிசாமி கூறினார். அதேபோலத்தான் அனைத்து அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு வாக்காளர்களை விலை பேசினார்கள். அங்கே ஜனநாயகம் இல்லை, பணநாயகம் தான் இருந்தது" என பேசினார்.
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?











Click it and Unblock the Notifications