இலவசமாக மடிக்கணினி, ஆடு,மாடு கொடுக்கிறார்கள்.. தண்ணீரை விற்கிறார்கள்.. சீமான் காட்டம்
Recommended Video
திருப்பரங்குன்றம்: இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சியை விட்டு போனால், இந்த நாடு நன்றாக இருக்க முடியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரேவதியை ஆதரித்து, அவனியாபுரத்தில் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மடிக்கணினி, ஆடு, மாடு உள்ளிட்டவற்றை தற்போதைய அரசு இலவசமாக கொடுக்கிறது. ஆனால் தண்ணீரை விற்கிறது. இயற்கை வளங்களான மலை, மணல் திருடப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் 890 பள்ளிகளை மூவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்த சீமான், 850 மதுக் கடைகளைத் திறக்க அரசு திட்டமிட்டிருக்கிறது என்றார். பள்ளியை மூடிவிட்டு, மதுகடைகயை திறக்கும் அவலவம் ஏற்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்தால்
கல்வி, மருத்துவம், குடிநீர், மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்தும் தனியாருக்கு கொடுக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தரமான கல்வி, தரமான மருத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறினார்.

மாற்றம் அவசியம்
மடிக்கணினி, ஆடு, மாடு உள்ளிட்டவற்றை தற்போதைய அரசு இலவசமாக கொடுக்கிறது. ஆனால் தண்ணீரை விற்கிறது இயற்கை வளங்களான மலை, மணல் திருடப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார். இந்த நாடு நன்றாக இருக்க வேண்டுமானால், இரு திராவிடக் கட்சிகளும் ஆட்சியை விட்டுச் செல்ல வேண்டும். அனைவரும் மாற்றம் என்ற செயலில் இறங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வேலைவாய்ப்பு
சாலைப் பணிக்கு 400 க்கும் மேற்பட்ட பொறியியல் படித்த இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக சட்டப்பேரவையில் பேசுகிறார்கள். அந்த அளவிற்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லாத நிலை உள்ளது.

விவசாயி சின்னம்
வாக்களிக்க செல்லும் போது, என்ன சின்னம் என்று தெரியாமல் மங்கலாக இரட்டை கரும்புடன் கூடிய விவசாயி சின்னத்தை அச்சிட்டு இருப்பார்கள் அதில் வாக்களியுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications