Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடுகள் வளர்க்கறீங்களா கொட்டகையில்? பட்டிகளில் உப்புக் கட்டிகள்.. சூப்பர் தகவலால் மதுரையில் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாட்டில் அக்னி நாளை முதல் துவங்குகிறது.. ஆனால், வெயில் கடந்த 3 மாத காலமாகவே கொளுத்தி கொண்டிருக்கிறது.. இனி அக்னியில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. இப்போது பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.. அதேபோல, கால்நடைகளும் வெயில் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.. இதனால் கோடை காலங்களில் பராமரிப்பு முறைகள் குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் முக்கிய அறிவுறுத்தல்களை, ஆலோசனைகளை கூறி வருகின்றனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை போலவே, மதுரை மாவட்டத்திலும் வெப்பம் கொளுத்தி வருகிறது.. இந்நிலையில், கோடைகாலத்தில் ஆடுகளுக்கான பராமரிப்பு மேலாண்மை குறித்து கால்நடைத்துறை சார்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madurai Goat farming TN Gov

வெள்ளாடுகள்

இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் சொன்னதாவது: "பொதுவாக வெள்ளாடுகளில் வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் செம்மறியாடுகளின் உடலில் ரோமங்கள் அதிகமாக இருப்பதால், அவற்றுக்கு வெப்ப அயர்ச்சியினால் ஏற்படும் விளைவுகள் அதிகமாக இருக்கும்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது ஆடுகளை காலை 6 மணி முதல் 10 மணி வரை மேய்ச்சலுக்கு விடலாம். அதேபோல் மாலை 3.30 மணி முதல் 6 மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.

பசுந்தீவனம்

ஒரே பகுதியில் ஆடுகளை மேய்க்காமல் சுழற்சி முறையில் இடமாற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் ஆடுகள் புற்களைத் தேடுவதற்காக செலவிடும் நேரம் மற்றும் உடல் ஆற்றல் செலவு ஆகியவை குறைவதோடு மேய்ச்சல் தன்மையும் அதிகரிக்கும். பருவ மழை காலங்களில் பசுந்தீவனம் அதிகமாக இருக்கும். அப்போது அவற்றினை ஊறுகாய்த் தீவனமாக மாற்றிச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இவற்றை கோடை காலத்தில் ஆடுகளுக்கு உணவாக அளிக்கலாம். தற்போது ஊறுகாய் புல் தயாரிக்கத் தேவையான பைகள் வேளாண் அலுவலகத்தில் கிடைக்கின்றன. காய்ந்த மேய்ச்சல் நிலம் உள்ள பகுதிகளில் வேளாண் உபரி பொருள்கள் அல்லது மர இலைகள் அல்லது புண்ணாக்கை ஆடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம். பால் கொடுக்கும் ஆடுகளுக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் முதலியவற்றை சத்தூட்டிகளாக அளிக்கலாம்.

வைட்டமின் A, E, C

உப்புக் கட்டிகளைப் பட்டிகளில் கட்டுவதன் மூலம் தேவையான தாது உப்புச்சத்துக்களை ஆடுகளுக்கு வழங்கலாம். கோடை வெயிலின் தாக்கத்தால் ஆடுகள் பலவும் சரியாக தீவனம் உட்கொள்ளாமல் போகலாம்.

இதுபோன்ற நிலையில் அவற்றுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை போக்கவும், வளர்சிதை வெப்ப உற்பத்தியைக் குறைக்கவும், கொழுப்பு செரிவூட்டப்பட்ட தீவனங்களை அளிக்கலாம். மேலும் ஆடுகளுக்கு உடலில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க வைட்டமின் A, E, C உள்ளிட்டவற்றை வழங்கலாம்" என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+