Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரத் விஷயத்தில் பிரதமர் பின்பற்றுவது அண்ணாவின் வழியை! ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: 'பாரத்' பெயர் விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், "இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, அண்ணாவின் வழியை பின்பற்றுகிறார்" என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனர் கூறியுள்ளார்.

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணி என்கிற பெயரில்தான் அனைத்து கூட்டங்களையும் எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் இந்த 'இந்தியா' எனும் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரதம் என்று மாற்ற மத்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Governor C.P.Radhakrishnan explains that PM Modi is following Anna in changing the name of Bharat

இதற்கேற்றாற்போல பாஜக தலைவர்கள் பலர், "இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். பாரதம்தான் நமது உண்மையான பெயர்" என்று கூறி வருகின்றனர். இந்த சலசலப்புகள் ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் மற்றொரு பஞ்சாயத்து வெடித்து கிளம்பியிருக்கிறது. அதாவது ஜி20 மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விருந்துக்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில், 'பாரத' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கமாக 'இந்திய' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இம்முறை பாரதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, ஏற்கெனவே இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வரும் கருத்தியலுக்கு வலு சேர்ப்பதை போல இந்த நடவடிக்கை இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கையை குறிக்கும் பெயர் பலகையில் 'இந்தியா' என்பதற்கு பதில் 'பாரத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Governor C.P.Radhakrishnan explains that PM Modi is following Anna in changing the name of Bharat

இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, அண்ணாவின் வழியை பின்பற்றுவதாக ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "இந்தியா - பாரத் விவகாரத்தில் பிரதமர் மோடி, அண்ணாவின் வழியை பின்பற்றுகிறார் என நினைக்கிறேன். மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என மாற்றியது சரி என்றால், இந்தியாவை 'பாரதம்' என மாற்ற முடிவு செய்வதும் சரியானதுதான்" என்று பேட்டியில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+