ஜல்லிக்கட்டு போட்டியின்போது சாதி பெயர்களை பயன்படுத்தவே கூடாது.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியின் போது சாதி பெயரை பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லுரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதனை பார்வையிட வெளி ஊர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை, காளைகளுக்கான பரிசோதனைகள், ஜல்லிக்கட்டுக்கான விழா ஏற்பாடுகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது சாதி பெயரை பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதாவது ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளையின் உரிமையாளர் பெயரோடு சாதிப் பெயரைக் கூறி ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்க்கக் கூடாது உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மாநகரை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் ஜல்லிக்கட்டு போட்டிகளை சாதி, மத ரீதியாக நடத்தகூடாது என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதி பெயரை தவிர்க்கவேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளை அவிழ்க்கும் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதி பெயர் குறிப்பிடப்பட்டு காளைகள் அவிழ்த்து விடப் படுகிறது.
அரசு அதிகாரிகளின் முன்னிலையிலேயே ஜாதி பெயர் அறிவிக்கப்பட்டு அவிழ்த்து விடப்படுகிறது. இப்படியெல்லாம் செய்யக்கூடாது என கடந்த 2019-ஆம் ஆண்டிலே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் முறையாக பலரும் பின்பற்றவில்லை. எனவே, இந்த ஆண்டு இதனை சரியாக பின்பற்றவேண்டும் என்று மதுரை உயர்நிதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உத்தரவுகளை முறையாக பின்பற்றுவோம் என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதி பெயர் சொல்லி அவிழ்க்க கூடாது என்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும்" என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும் முன் தீண்டாமை உறுமொழி எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications