திருச்செந்தூர் குடமுழுக்கு.. தமிழில் வேள்வி நடத்துவது குறித்து பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!
மதுரை: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழாவின்போது தமிழில் வேள்வி நடத்துவது குறித்து பரிசீலிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வரும் ஜூலை 7 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. தமிழ்க கடவுளான முருகன் கோவிலின் குடமுழுக்கு நிகழ்வை தமிழ் மொழியில் நடத்தக்கோரி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை என்று சுரேஷ்பாபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் மனுதாரர் வேள்வி ஆசிரியராக வேள்வி குண்ட நிகழ்வில் கலந்து கொண்டு தமிழ் மந்திரம் உச்சரித்து வேள்வி நடத்தக் கோரி இந்து அறநிலையத்துறையிடம் செய்த மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து வரும் ஜூலை 7 ஆம் தேதிக்குள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மனுதாரர் வேள்வி குண்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிப்பது பற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வரும் காலங்களில் நடக்க இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் கும்பாபிஷேகங்களில் தமிழ் மந்திரம் உச்சரித்து வேள்வி குண்ட நிகழ்வுகள் நடைபெற செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications