Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாப் சிட்டிகளையே தூக்கி.. உயரே பறக்குது மதுரை.. மெட்ரோ, ஐடி பார்க்கை விடுங்க.. முதலில் இதை படிங்க

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தொடர்பாக தேசிய அளவில் கவனம் பெற வைக்கும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இந்தியாவின் பல டாப் சிட்டிகளை பின்னுக்கு தள்ளி மதுரை கவனம் பெற வைத்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக டைடல் பார்க் வரவுள்ளது. முதற்கட்டமாக 600 கோடி 5 ஏக்கரில் டைடல் பார்க் தொடங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும் 5 ஏக்கரில் டைடல் பார்க் உருவாக்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டைடல் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

How Madurai did become the top travel destination for the domestic Indian flight travellers?

மதுரையில் அமைக்கப்பட உள்ள ஐடி பார்க்கிங் மாதிரி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 2 மாதிரி படங்களில் ஒன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று ட்வின் டவர் பாணியில் இரண்டு டவர்கள் கொண்ட தலா 25 மாடிகள் கொண்ட கட்டிட மாதிரி உருவாக்கப்பட்டு உள்ளது. இன்னொன்று வட்ட வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இரண்டில் ஒன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில்தான் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது. இன்னொரு பக்கம் மதுரை மெட்ரோ தொடர்பான பல்வேறு ஆலோசனைகள், சாத்தியக்கூறு சோதனைகள் நடந்து வருகின்றன. சென்னையில் உள்ளதை போன்ற மெட்ரோ மூன்று பெட்டிகளுடன் வர உள்ளது. இந்த பணிகள் 3 வருடம் நடக்கும். 2027ல் மதுரை மெட்ரோ பணிகள் முடிவு அடையும். இந்த மதுரை மெட்ரோவில் 5 km தூரத்திற்கு Underground System (2 tunnels ) செயல்படுத்தப்படும். கோவில் இருக்கும் பகுதிகளில், மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் மெட்ரோ அமைக்கப்படும்.

இந்த மெட்ரோ சுரங்க பாதையாக இருக்காது என்று முதலில் கூறப்பட்டது. மாறாக மொத்த பாதையும் பாலம் கட்டப்பட்டு அதில்தான் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த முறை சுரங்க பாதையும் அமைக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த திட்டப்படி திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்லும்.

திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தா நகர், மதுரா கல்லூரி, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்ற பெஞ்ச் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக இந்த மெட்ரோ செயல்படும்.இப்படி மெட்ரோ மற்றும் ஐடி பார்க்கிற்கு இடையே இன்னொரு நல்ல செய்தியும் வெளியாகி உள்ளது.

என்ன செய்தி?: மதுரை தொடர்பாக தேசிய அளவில் கவனம் பெற வைக்கும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இந்தியாவின் பல டாப் சிட்டிகளை பின்னுக்கு தள்ளி மதுரை கவனம் பெற வைத்துள்ளது. Kayak என்ற சுற்றுலா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவில் மக்களால் அதிகம் தேடப்பட்ட விமான நிலையம் மதுரைதான்.

அதாவது மதுரைக்கு டிக்கெட் எவ்வளவு, மதுரை விமானம் நிலையத்திற்கு செல்வது எப்படி என்றுதான் இந்தியாவில் அதிக அளவில் உள்ளூர் பயணிகள் தேடி உள்ளனர். சென்னை, மும்பை, பெங்களூரை பின்னுக்கு தள்ளி மதுரை இதில் டாப் இடம் பிடித்துள்ளது. கடந்த வருடத்தை விட கிட்டத்தட்ட 160 சதவிகிதம் பேர் இந்த முறை கூடுதலாக மதுரையை பற்றி தேடி இருக்கிறார்களாம். மதுரைக்கு செல்ல வேண்டும் என்று பலர் விரும்புவதாலேயே இந்த தேடுதல் நடைபெற்றதாக அந்த நிறுவனம் கூறி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+