காவல் சித்ரவதைகளை ஒழிக்க வேண்டும்! மதுரையில் அணி திரண்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள்!
மதுரை: காவல் சித்ரவதைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக மதுரையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கருத்தரங்கம் நடத்தியுள்ளனர்.
அதில் காவல் விசாரணை, கைது உள்ளிட்ட விவகாரங்களின் போது போலீஸார் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற 41 வழிகாட்டு நெறிமுறைகளை பதாகை மூலம் வெளியிட்டனர்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

காவல் சித்ரவதை
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோர்க்கான ஐ.நா.வின் சர்வதேச ஆதரவு நாள் கருத்தரங்கம் மதுரையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்றது. அதில், காவல் விசாரணை, கைது குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு சுற்றறிக்கை மூலம் வெளியிட்ட 41 வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பதாகையை மூத்த வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் வெளியிட்டார்.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஷாஜி செல்லன் அவர்கள் பேசும் போது, ''உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துக் காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும், காவல் நிலையத்தின் நுழைவு வாயில், வெளியேறும் வாயில், கைதி அறையின் வெளிப்பகுதி, வராண்டா, வரேற்பறை, காவல் ஆய்வாளர் அறை, சார்பு ஆய்வாளர் அறை, காவல்நிலைய சுற்று பகுதி, காவல் நிலைய பின் பகுதி ஆகிய இடங்களில் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும். இரவிலும் தெளிவாக ஒளிப்பதிவு செய்யும் தொழில்நுட்பத்துடன் கேமரா இருக்க வேண்டும். அதன் பதிவானது குறைந்தது 18 மாதங்களாவது பாதுகாக்கப்பட வேண்டும்'' என்று விரிவாக எடுத்துரைத்தார்.

ஜவாஹிருல்லா பேச்சு
சிறப்புரையாற்றிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசும் போது, "சித்திரவதையை செய்பவர்கள் காவல்துறையினர், பாதிப்படைபவர்கள் பாமரமக்கள் என்று நாம் நினைத்தால் அது தவறு. இன்றைய இந்தியாவில் அரசின் தவறைச் சுட்டிகாடுபவர்கள் அரச பயங்கரவாதத்தால், கொடுங்கோன்மையால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் வாழும் உரிமை கேள்விக்குறியாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கு தொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தியாவின் எதிர்காலம் கவலைக்குரியதாக உள்ளது.''

புல்டோசர்கள்
''புல்டோசர்களைக் கொண்டு அரசு வீடுகளை இடிக்கவில்லை, இந்திய அரசமைப்புச் சட்டத்தையே இடிக்கிறார்கள். நாம் வாழக்கூடிய மதச்சார்பற்ற இந்தியாவின் முச்சந்தியில் நின்று கொண்டிருக்கிறோம். மிகவும் மோசமான ஒரு சூழலில் இருக்கிறோம். எனவே காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு தமிழக எல்லைகளைத் தாண்டி செயற்பட வேண்டிய தேவை உள்ளது" என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பேசிய அனைவரும் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையை இந்தியா ஏற்புறுதி செய்ய வேண்டும். சித்திரவதையற்ற உலகு படைக்க அனைவரும் இணைந்து செயலாற்றுவோம்'' என்று வலியுறுத்தினர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications