பல்கலைக்கழகத்திற்கும், சிகரெட் கம்பெனிக்கும் வித்தியாசம் இல்லையா? ஹைகோர்ட் சரமாரி கேள்வி
மதுரை: சிகரெட் கம்பெனிக்கும் தமிழ் பல்கலைக்கழகத்திற்கும் வித்தியாசம் இல்லையா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு அனுமதி பெறாமல் சான்றிதழ் படிப்பு நடத்தினால், ஏன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கக் கூடாது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "நான் தஞ்சாவூர் வல்லம் பகுதியில் சித்த மருத்துவசாலை நடத்தி வருகிறேன். தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்கிறேன். எனவே சித்த மருத்துவ கிளினிக் நடத்துவதில் தலையிடக்கூடாது என்று தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவானது இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் பல்கலைக் கழகத்தின் சார்பில், 'தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் சித்தா சான்றிதழ்களில் இந்த படிப்பு சான்றிதழை வைத்து சித்தா மருத்துவம் பார்க்க முடியாது என்று சான்றிதழில் சிறிய எழுத்தில் குறிப்பிட்டு இருக்கிறோம்' என்று கூறப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ்கள் படிப்பு வழங்குகிறது. இவ்வாறு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் சித்தா சான்றிதழ் படிப்பை வைத்து சித்த மருத்துவம் பார்க்க இயலாது என குறிப்பிட்டுள்ளோம் என்று கூறுவது, சிகரெட் பெட்டியில் புகைப்பிடித்தல் கூடாது, புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என சிறிய எழுத்துக்களில் எழுதியிருப்பார்களே அதில் குறிப்பிடப்பட்டது போல் இருக்கிறது.
தமிழ் பல்கலைக்கழகத்திற்கும், சிகரெட் கம்பெனிக்கும் வித்தியாசம் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அவ்வாறு அனுமதி பெறாமல் சான்றிதழ் படிப்பு நடத்தினால், ஏன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க கூடாது.
இதுவரை எத்தனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களுடன் தஞ்சாவூர் பல்கலைக்கழக பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தவிட்டார். இதன்பின்னர் இந்த வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications