Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வலிக்குதுய்யா, வைகையை விட்றாதீங்க.. பல் விழுந்த முகம் போல மதுரை சாலைகள்: உருகி சொன்ன சாலமன் பாப்பையா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையின் 100 வார்டுகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட வேண்டும், ஆண்டுதோறும் போட்டிகளை நடத்த வேண்டும்.. மதுரையின் மத்திய சிறைச்சாலை மாற்றப்பட்டால், அந்த இடத்தில் ஒரு மிருகக்காட்சி சாலையை அமைக்கலாம்.. தனது இந்தத் திட்டங்கள் குறித்து விரிவான கட்டுரையை வழங்கவும் தான் தயாராக இருக்கிறேன்" என்று சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற "என் ஊர் என் கனவு 2030" தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பு கருத்தரங்கில், மூத்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் மதுரை நகரின் வளர்ச்சி குறித்து தனது ஆதங்கங்களையும் ஆலோசனைகளையும் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.

Madurai Vaigai River Solomon Pappaiah TN Gov En Oor En Kanavu Vision 2030

அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் பேசிய சாலமன் பாப்பையா, "வைகை ஆறு இல்லாவிட்டால் மதுரை என்ற ஊரே உருவாகியிருக்காது.. லண்டன் மாநகரின் தேம்ஸ் நதியைப் போல வைகையை நீர் நிலையாக மாற்ற வேண்டும்..

மதுரை வைகை ஆறு

வைகையின் இருபுறமும் நடக்கும் ஆக்கிரமிப்புகளை தடுத்து, மணல் திருட்டை அறவே ஒழிக்க வேண்டும், நகரின் பழமையான கிருதுமால் நதி இன்று குப்பைகள் கொட்டப்பட்டு கொசு உற்பத்தி மையமாக மாறியிருப்பது மனதிற்குப் பெரிய வலியைத் தருகிறது.. வண்டியூர் தெப்பக்குளத்தை போல மற்ற கண்மாய்களையும் தூர்வார வேண்டும்.. இதை பாராட்டும்போது தயவுசெய்து அரசியல் ஆக்க வேண்டாம், இதெல்லாம் நம்முடைய கடமை...

மதுரையின் ஆன்மாவாக திகழும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சிறு சேதம் ஏற்பட்டால் கூட மதுரையின் கதையே முடிந்துவிடும், மீனாட்சி அம்மன் கோயிலில் தண்ணீர் நின்றால் அந்த கட்டிடம் என்னாகும்?

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு பொறியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மீனாட்சி அம்மன் கோவில், கோரிப்பாளையம் தர்கா மற்றும் செயின்ட் மேரிஸ் சர்ச் ஆகிய மூன்றையும் மையப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும்..

மதுரையின் பேருந்து நிலையங்கள் இன்று பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் 8 ஆண்டுகளாக பணிகள் முடங்கி கிடக்கின்றன.. ஒரு காலத்தில் சிறப்பாக இருந்த பேருந்து நிலையம் இன்று சத்திரம் சாவடி போல மாறியிருக்கிறது...

சாலமன் பாப்பையா உருக்கம்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை போல மதுரையிலும் பிரம்மாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும், பெரியார் பேருந்து நிலையத்தை தவிர மற்றவற்றை நகருக்கு வெளியே மாற்ற வேண்டும்.. மீனாட்சி கோவிலை சுற்றியுள்ள நெரிசலை குறைக்க மினி பேருந்துகளை இயக்கலாம்.. ஒரே மழையில் சாலைகள் பல் விழுந்த முகம் போல குண்டும் குழியுமாக மாறிவிடுகின்றன..

மதுரையின் 100 வார்டுகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட வேண்டும், ஆண்டுதோறும் போட்டிகளை நடத்த வேண்டும்.. மதுரையின் மத்திய சிறைச்சாலை மாற்றப்பட்டால், அந்த இடத்தில் ஒரு மிருகக்காட்சி சாலையை அமைக்கலாம்.. தனது இந்தத் திட்டங்கள் குறித்து விரிவான கட்டுரையை வழங்கவும் தான் தயாராக இருக்கிறேன்" என்றெல்லாம் விழாவில் சாலமன் பாப்பையா கூறினார்..

அமைச்சர் மூர்த்தி

இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி பேசும்போது, என் மனதில் இருந்ததையெல்லாம் சாலமன் பாப்பையா பேசிவிட்டார்.. மதுரையின் தேவைகளை துல்லியமாக பிரதிபலித்து சொல்லிவிட்டார்..

மதுரை ஒரு மதச்சார்பற்ற ஊர். மீனாட்சி அம்மன் கோவிலின் நெரிசலை குறைக்கவும், வைகை ஆற்றைச் சுத்தப்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்படும். கீழவாசல் மற்றும் யானைக்கல் பகுதி மக்கள் நகரின் வளர்ச்சிக்காக ஒத்துழைப்பு வழங்கும்போது மதுரை மேலும் அழகாகும்..

கோயம்புத்தூர் போன்ற தொழில் வளர்ச்சி உணர்வு தற்போது மதுரைக்கும் வந்துள்ளதால் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐடி (IT) உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றங்கள் நிகழும், மதுரை விமான நிலையம் விரைவில் சர்வதேச அந்தஸ்து பெற போகிறது" என்று உறுதிப்படக் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+