Kamal: மீடியா மைக்கில் புலம்பிய சிலரை! நாடாளுமன்ற மைக்கிலும் புலம்ப வைத்த கமல்! ஸ்டாலின் கலகல
மதுரை: நாடாளுமன்றத்தில் சிலரை கமல்ஹாசன் புலம்ப வைத்திருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் நகைச்சுவையாக தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கமலின் கன்னிப்பேச்சில் தமிழ் குறித்து கமல் பேசியிருந்தார்.
மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் கமல் பண்பாட்டு மையம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட "மறவோம்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், சிலர் சொல்லுவார்கள், கமல் பேசுறது எங்களுக்கு புரியவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு புரியாமல் இல்லை. ஆனால் புரிஞ்சிக்க கூடாதுனு நினைக்கிறாங்க.
மீடியா மைக் முன்னால புலம்பி தீர்த்தவங்க! இப்ப பார்லிமென்ட் மைக்கில் சிலரை புலம்ப வைத்திருக்கிறார். அதற்காக எனது பாராட்டுகள். அவர் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் தொடங்கி 9 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சமநீதிக்காகவும் சமூகநீதிக்காகவும் உங்கள் (கமல்) குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா என்பது கமலின் பாடல் வரி அது. அப்படி அன்பின் பாதையை வலியுறுத்திய காந்தியை மறவோம்! காந்தியின் கொள்கைகளை காக்க வெல்வோம் ஒன்றாக என முதல்வர் பேசினார்.












Click it and Unblock the Notifications