தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
Recommended Video
மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி சிபிஐ வரும் 15ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் படி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நோய்கள் வருவதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றமசாட்டினார்.
இது தொடர்பாக போராட்டம் நடத்தி வந்த தூத்துக்குடி மக்கள் கடந்த ஆண்டு மே 22ம் தேதி 100வது நாள் போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

13பேர் சுட்டுக்கொலை
இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி நடந்த போராட்டத்தை ஒடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார். பேரணியில் பங்கேற்றவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது விசாரணையை 4 மாதத்தில் முடித்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் 2018 ஆகஸ்டு மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை விசாரணை முடியவில்லை. இதனால் கூடுதல் கால அவகாசம் கேட்டு சிபிஐ சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரிக்க அவகாசம்
அந்த மனுவில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வந்த 222 வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்து கடந்த ஆண்டு 2018 அக்டோபர் 8-ல் முதல் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 00 பேரிடம் விசாரித்துள்ளோம். மொத்தம் 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் வைத்திருந்தார்களா?
துப்பாக்கிச்சூடு நாளில் என்ன நடந்தது, அவற்றிற்கான காரணங்கள், அனுமதி பெறாமல் கூடியது ஏன்? அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தனரா? போராட்டத்தின் மையப்பொருள் என்ன? என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டியநிலையில் சிபிஐ உள்ளது. எனவே இவற்றை விசாரித்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் என கூறப்பட்டது.

செப்.15ம் தேதி அறிக்கை
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ட்டது. இதையடுத்து நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் இப்போது வரை எடுத்த நடவடிக்கைள் மற்றம் வழக்கின் நிலை தொடர்பாக செப்டம்பர் 15ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications