பஞ்சாயத்து தலைவர் தேர்தல்.. காரைக்குடி எம்.எல்.ஏ. மனைவி வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் காரைக்குடி எம்.எல்.ஏ. மனைவி வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியின் மனைவி தேவி தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியின் மனைவி தேவி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிமன்றத்தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் நானும், பிரியதர்ஷினி என்பவரும் போட்டியிட்டோம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் 62 வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.. சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது..

சிறிது நேரத்தில் என்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும், அவருக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரியதர்ஷினியின் வெற்றி செல்லும் என உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பிரியதர்ஷினி சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்தப்பட்டது. இதில் நான் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனவே தேவியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் ஆஜராகி, இந்த விவகாரத்தில் கீழ் நீதிமன்றம் முறையான விசாரணை நடத்தி, பிரியதர்ஷினி வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது என வாதாடினார். இதனை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தேவியின் மறு பரிசீலனை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications